மேலும் அறிய

Sri Lanka: 'பெட்ரோல் டீசலுக்கு இனி ஆன்லைன் பாஸ்.. QR கோடு அவசியம்.' பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவிப்பு!

Sri Lanka: இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால், இனி பெட்ரோல் டீசல் வாங்க ஆன்லைன் பதிவு மற்றும் கியூஆர் கோடு ஸ்கேனிங் முறையினை அறிமுகம் செதுள்ளது அந்நாட்டு பெட்ரோலியத்துறை.

Sri Lanka: இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால், இனி பெட்ரோல் டீசல் வாங்க ஆன்லைன் பதிவு மற்றும் கியூஆர் கோடு ஸ்கேனிங் முறையினை  அறிமுகம் செய்துள்ளது அந்நாட்டு பெட்ரோலியத்துறை. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டில் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் மக்கள் வாழ்வதற்கே பெரும் சவால்களை எதிர்கொண்டு வந்தனர். தொடர்ந்து நீடித்த பொருளாதார நெருக்கடியால் வேலையின்மை மற்றும் குறைந்த ஊதியம் என மக்கள் தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாகினர். வாழ்வதற்கு வேறு வழியின்றி அனுமதியில்லாமல் அருகில் இருந்த நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக குடியேறினர். பொருளாதார்ஹ நெருக்கடிக்கு ஆளும் அரசுதான் முழுக்காரணம் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. 

சமீபத்தில் இலங்கை பிரதமர் கோட்டபய ராஜபக்சேவின் அலுவலகத்தினை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதனால் இலங்கையில் இருந்து மலேசியா தப்பியோடியுள்ளார் கோட்டபய ராஜபக்சே. ஆனால் எரிபொருள் பற்றாக்குறை, உணவுப்பொருள் தட்டுப்பாடு என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த வாரம் முதலே இலங்கை முழுவதும் எரிபொருள் இல்லாமல் பெரும் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டு வந்தது. மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகல் என தொடர்ந்து நின்றும் எரிபொருள் வாங்கமுடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, இறக்குமதி செய்யப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் மக்களுக்கு அனைவருக்கும் சரியாகப் போய்ச் சேரும் படி, ஆன்லைன் பெட்ரோல் பாஸ் மூலம் விநியோகிக்கப்படும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் காஞ்சனா விஜிசேகரா தெரிவித்துள்ளார். 

இந்த ஆன்லைன் பாஸ் குறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்த ஆன்லைன் பாஸ் இலங்கையில் உள்ள தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் பாஸுக்கு என தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும் கூறியுள்ளார். முதலில் fuelpass.gov.lk இந்த வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய வண்டி எண் மற்ரும் அரசால் வழங்கப்பட்டுள்ள குடிமகனுக்கான ஆதரங்கள் மற்றும் பாஸ்போர்ட் எண்ணினைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்.  பின்னர் வலைதளத்தில் காட்டும் கியூஆர் கோடினை ஸ்கீரீன்ஷாட் எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் கியூஆர் கோடினை பிரிண்ட் போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் பெட்ரோல் பங்கிற்கு செல்லும் போது கியூஆர் கோடினை காட்டி ஸ்கேன் செய்து எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம். இதனால் அனைவருக்கும் சரியான விகிதத்தில் எரிபொருள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget