மேலும் அறிய

எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா

தென்கொரியாவில் வெடித்து சிதறிய விமானத்தில் மொத்தம் 179 பேர் தற்போது வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தென்கொரியா முழுவதும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து உலகின் மற்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாங்காக்கில் இருந்து தென்கொரியாவின் முவான் நகரத்திற்கு போயிங் 737-800 பயணிகள் விமானம் இந்திய நேரப்படி இன்று காலை ஒன்று சென்றது.

179 பேர் உயிரிழப்பு:

ஆனால், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் இருந்து விலகி, விமான நிலையச் சுற்றுச்சுவரில் இடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவம் பெரும் சாேகத்தை தென்கொரியா முழுவதும் ஏற்படுத்தியது.

175 பயணிகள், விமானக்குழுவினர் 6 பேர் என மொத்தமாக 181 பேர் இந்த விமானத்தில் பயணித்தனர். முதற்கட்ட தகவலில் 28 பேர் உயிரிழந்திருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக 179 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தென்கொரியா மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீக்கிரையான விமானம்:

விமானம் சம்பவ இடத்திலே வெடித்துச் சிதறியதில் விமானத்தில் இருந்த அனைவரும் தீக்கிரையாகினர். தீயில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கவலைக்கிடமான நிலையில் பலரும் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும்  பணியும், அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 

தென்கொரியாவின் செய்தி நிறுவனமான யான்கோப் வெளியிட்ட தகவலின்படி, விமானம் தரையிறங்கும்போது தரையிறங்குவதற்கான கியர் வேலைசெய்யவில்லை என்றும், அதன் காரணமாகவே விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி சுற்றுச்சுவரில் மோதி வெடித்துச் சிதறியது என்றும் தெரிவித்துள்ளது. 

சோகத்தில் மூழ்கிய தென்கொரியா:

புத்தாண்டு பிறக்க இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், 175 பேரை முவான் விமான நிலையம் காவு வாங்கியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமே 181 பேர் பயணித்த விமானத்தில் தற்போது வரை 179 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய இரண்டு பேரும் கவலைக்கிடமாகவே இருக்கின்றனர். 

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவை நோக்கிச் சென்ற பயணிகள் விமானத்தை தவறுதலாக ரஷ்யாவின் ட்ரோன் சுட்டு வீழ்த்தியதில் ஏராளமோனார் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாக அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
TN Rain: சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்
மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்
Embed widget