மேலும் அறிய

Pakistan Train: முடிவுக்கு வந்த ரயில் கடத்தல் - உயிர் தப்பிய 340 பயணிகள் - துப்பாக்கிகளால் பறிபோன உயிர்கள்

Pakistan Train: பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இருந்த ரயில் பயணிகள், ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Pakistan Train: பாகிஸ்தானில் ரயில் கடத்தப்பட்ட சம்பவத்தில் பயணிகள் 21 பேரும், தீவிரவாதிகள் 33 பேரும் உயிரிழந்தனர்.

340 பயணிகள் மீட்பு:

பலுசிஸ்தான் மாகாணத்தில் கடத்தப்பட்ட ரயிலில் இருந்து அனைத்து தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொன்று, 190 பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட பலூச் போராளிகளை ஒழிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்தார். அங்கு இருந்த அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப், துன்யா நியூஸ் டிவியிடம் பேசுகையில், பலூச் போராளிகள் பிணைக் கைதிகளாக வைத்திருந்த 21 பயணி மற்றும் நான்கு துணை ராணுவ வீரர்கள் என 28 பேர் கொல்லப்பட்டதாக முதலில் கூறினார். தொடர்ந்து,  "(புதன்கிழமை) மாலையில் அனைத்து பயங்கரவாதிகளையும் கொன்று அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டதன் மூலம் ஆயுதப்படைகள் வெற்றிகரமாக நடவடிக்கையை முடித்தன" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஷெரீப் கூறினார். மொத்தமாக இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர், 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தப்பட்டது எப்படி?

ஒன்பது பெட்டிகளில் 440 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ், குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​பலூச் விடுதலைப் படை (BLA) ரயிலைத் தாக்கியது. வெடிபொருட்களை கொண்டு ரயிலை தடம் புரள செய்து, குவெட்டாவிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் குடலார் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகே கடத்தியது. கடத்தல் சம்பவத்தில் 70 முதல் 80 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. ரயில் கடத்தல் சம்பவத்திற்கு தனது முதல் எதிர்வினையாக, டஜன் கணக்கான பயங்கரவாதிகள் 'நரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்' என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அப்பாவி உயிர்களை இழந்ததால் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறினார்.

எதற்காக கடத்தல்?

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையை ஒட்டிய பலுசிஸ்தானில் இயற்கை வளங்களை வெளியாட்கள் சூறையாடுவதாகக் குற்றம் சாட்டும் பிரிவினைவாத குழுக்களின் தாக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. பெரும்பாலும் மாகாணத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்புப் படையினர் மற்றும் இனக்குழுக்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன. தங்களை தனி நாடாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சிறையில் உள்ள தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கில் BLA இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆனால், 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்த கடந்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் சொல்வது என்ன?

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், "ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து எனக்கு விளக்கிய முதலமைச்சர் சர்ஃபராஸ் புக்தியுடன் பேசினேன். இந்த கொடூரமான செயலால் முழு தேசமும் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளது, அப்பாவி உயிர்களை இழந்ததால் வருத்தமடைந்துள்ளது - இதுபோன்ற கோழைத்தனமான செயல்கள் பாகிஸ்தானின் அமைதிக்கான உறுதியை அசைக்க முடியாது. தியாகிகளின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னாவில் மிக உயர்ந்த பதவிகளை வழங்குவானாக, காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய ஆசீர்வதிப்பாராக. டஜன் கணக்கான பயங்கரவாதிகள் நரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்," என்று ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டு இருந்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ind vs Eng Lords Test: ”பவுன்ஸ், திடீரென குத்தி சுழன்ற பந்து” - லார்ட்ஸில் உடைந்த இதயங்கள், வீடியோ வைரல்
Ind vs Eng Lords Test: ”பவுன்ஸ், திடீரென குத்தி சுழன்ற பந்து” - லார்ட்ஸில் உடைந்த இதயங்கள், வீடியோ வைரல்
Chennai Crime: மனைவியுடன் படம் பார்த்த புது மாப்பிள்ளை திடீர் மரணம் - திருமணமாகி ஒரு மாதம் தான்..
Chennai Crime: மனைவியுடன் படம் பார்த்த புது மாப்பிள்ளை திடீர் மரணம் - திருமணமாகி ஒரு மாதம் தான்..
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Eng Lords Test: ”பவுன்ஸ், திடீரென குத்தி சுழன்ற பந்து” - லார்ட்ஸில் உடைந்த இதயங்கள், வீடியோ வைரல்
Ind vs Eng Lords Test: ”பவுன்ஸ், திடீரென குத்தி சுழன்ற பந்து” - லார்ட்ஸில் உடைந்த இதயங்கள், வீடியோ வைரல்
Chennai Crime: மனைவியுடன் படம் பார்த்த புது மாப்பிள்ளை திடீர் மரணம் - திருமணமாகி ஒரு மாதம் தான்..
Chennai Crime: மனைவியுடன் படம் பார்த்த புது மாப்பிள்ளை திடீர் மரணம் - திருமணமாகி ஒரு மாதம் தான்..
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
TVK Fails?: கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
Embed widget