மேலும் அறிய

'ஆபரேஷன் தோஸ்த்' உதவியை மறந்ததா துருக்கி? ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை OIC க்கு கொண்டு சென்றதால் அதிர்ச்சி!

ஜெனீவாவில் உள்ள இந்திய நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் சீமா பூஜானி, துருக்கி மற்றும் OIC பிரதிநிதியின் அறிக்கை குறிப்பை முற்றிலும் நிராகரித்ததாக தெரிகிறது.

இந்தியா சமீபத்தில் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு உதவுவதற்காக டன் கணக்கில் மருத்துவ உதவி மற்றும் பணியாளர்களை அனுப்பிய பிறகும், ஜம்மு & காஷ்மீர் பிரச்சினையை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC), துருக்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

நிராகரித்த இந்தியா

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் செய்தியின்படி, மனித உரிமைகள் கவுன்சிலின் 52வது அமர்வின் உயர்மட்டப் பிரிவில் பதில் அளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி, ஜெனீவாவில் உள்ள இந்திய நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் சீமா பூஜானி, துருக்கி மற்றும் OIC பிரதிநிதியின் அறிக்கை குறிப்பை முற்றிலும் நிராகரித்ததாக தெரிகிறது. இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார்.

ஆபரேஷன் தோஸ்த்' உதவியை மறந்ததா துருக்கி? ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை OIC க்கு கொண்டு சென்றதால் அதிர்ச்சி!

உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்

"OIC அறிக்கையைப் பொறுத்தவரை, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் பற்றிய தேவையற்ற குறிப்புகளை நாங்கள் நிராகரிக்கிறோம்," என்று பூஜானி ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக மேற்கொள்ளும் முயற்சி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜித்தாவை தளமாகக் கொண்ட OICயை இந்தியா முன்பு விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்: "தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்.. வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம்" - தமிழக அரசை பாராட்டி ஆளுநர் ரவி ட்வீட்..

OIC நம்பகத்தன்மையை இழந்துவிட்டது

வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரச்சினைகளில் அப்பட்டமான வகுப்புவாதம், பக்கச்சார்பு மற்றும் தவறான அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் OIC ஏற்கனவே அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றார். பூகம்பத்தின் பாதிப்பில் இருந்து மீள இந்தியா செய்த உதவியை அதற்குள் மறந்துவிட்டதா துருக்கி என்ற கேள்வியையும் பலர் எழுப்புகின்றனர்.

ஆபரேஷன் தோஸ்த்' உதவியை மறந்ததா துருக்கி? ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை OIC க்கு கொண்டு சென்றதால் அதிர்ச்சி!

துருக்கி பூகம்பம்

துருக்கியில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்ட நிலையில், அதிலிருந்து மீள இந்தியா பெருமளவில் உதவி வருவது குறிப்பிடத்தக்கது. இடிபாடுகளைத் தோண்டி உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க இந்தியா முதலில் உதவி செய்தது. அத்துடன் இந்தியா மருத்துவப் பொருட்கள், மருத்துவர்கள் மற்றும் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களையும் துருக்கிக்கு அனுப்பி பெரும் உதவியை செய்திருந்தது. துருக்கிக்கு மட்டுமில்லாமல், சிரியாவுக்கும் இந்திய விமானப்படையின் சி-130ஜே விமானத்தில் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியது. NDRF இன் தன்னார்வக் குழுக்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற பணியாளர்கள், ராம்போ மற்றும் அவர்களது தோழமையான நாய்ப் படை, சிறப்பு வாகனங்கள் மற்றும் பல பொருட்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டன. மேலும், இந்திய ராணுவத்தின் 30 படுக்கைகள் கொண்ட நடமாடும் மருத்துவமனை அமைப்பதற்கான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களும் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டன. ஆபரேஷன் தியேட்டர் மற்றும் எக்ஸ்ரே மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget