மேலும் அறிய

Sudan Crisis: சூடான் கலவரம்.. அடுத்தடுத்து மீட்கப்படும் இந்தியர்கள்..! ஆபரேஷன் காவேரி நிலவரம் என்ன?

சூடானில் சிக்கி தவித்த 250க்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்திய விமானப்படை மூலம் ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சூடானில் சிக்கி தவித்த 250க்கும் மேற்பட்ட இந்தியர்களை, இந்திய விமானப்படை மூலம் ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

சூடான் கலவரம்:

ஆப்ரிக்கா நாடான சூடானில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டுக் கலவரம் நடந்து வருகிறது. அங்கு நீண்ட காலமாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. ஆனால், அந்தப் புரட்சிக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தபடி ஜனநாயக முறையில் ஆட்சி அமையவில்லை. மாறாக அங்கு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சியிலும் மக்கள் நிம்மதியாக இல்லை.

அங்கு வறுமையும் தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. அது மட்டுமல்லாமல் எண்ணெய் வளங்கள் மூலமாக வரும் வருமானமும் மக்களுக்கு முழுசாக நலத்திட்டங்களாக சென்று சேர்வதில்லை. இப்படி, ஜனநாயக ஆட்சி இல்லாத நிலையில் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. மேலும் ராணுவம் மற்றும் மக்களிடையே கிளர்ச்சி எழுந்து கலவர பூமியாக மாறியுள்ளது சூடான்.

மீட்கப்படும் இந்தியர்கள்:

இந்நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இன்று மேலும் 135 இந்தியர்கள்  IAF C-130J விமானத்தின் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த விமானம் தற்போது சவுதி அரேபியாவின் ஜெட்டாவை அடைந்துள்ளது.

முன்னதாக இன்று, IAF C-130J விமானம் மூலம் 148 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு அந்த விமானம் ஜெட்டாவை அடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்திய கப்பல் படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் 278 பேர் வெளியேற்றப்பட்டனர்.

நேற்றைய தினம் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர், சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள், இந்தியாவுக்கு வருவதற்கு முன், ஜெட்டாவில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் உள்ள போக்குவரத்து வசதியை ஆய்வு செய்தார். அங்கு வரக்கூடிய இந்தியர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தீவிர ஏற்பாடு:

சூடானில் கலவரம் தீவிரமடையும் நிலையில் அங்கு இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்தார். சுமார் 500 இந்தியர்கள் சுடான் துறைமுகத்தை அடைந்துள்ளதாகவும், அங்கிருந்து அவர்களை நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அமெரிக்கா மற்றும் சவுதி அரேபிய நாடு நடத்திய பேச்சுவார்ததை காரணமாக சூடானில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் வரை அதாவது 72 மணி நேரம் வரை கலவரம் நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Embed widget