![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President - Black Magic : மாலத்தீவின் சுற்றுச்சூழல் அமைச்சர் பாத்திமா ஷம்னாஸ் அலி சலீம் உள்ளிட்ட 4 பேர், அதிபர் முகமது முய்ஸு-க்கு சூனியம் வைத்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.
![Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன? Maldives minister arrested for performing black magic’ on President Muizzu viral news in tamil Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/29/8ce9c6f770c1ab552a85e4dc61d1be001719670087280572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாலத்தீவின் சுற்றுச்சூழல் அமைச்சர் பாத்திமா ஷம்னாஸ் அலி சலீம், அதிபர் முகமது முய்ஸு-க்கு சூனியம் வைத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிபருக்கு சூனியம்:
மாலத்தீவின் அதிபராக மீண்டும் முகமது முய்ஸு தேர்வு செய்யப்பட்டார். அதிபருடன் மிகவும் நெருக்காமாக பழக வேண்டும் என நினைத்து, அவருக்கு, அந்நாட்டின் அமைச்சர் உட்பட 4 பேர் சூனியம் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜூன் 23 அன்று வெளிச்சத்திற்கு வந்தது, அதைத் தொடர்ந்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இவர்கள் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, ஷாம்னாஸ் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மாநில அமைச்சராக இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று உள்ளூர் செய்தி நிறுவனமான சன் தெரிவித்துள்ளது.
விசாரணை:
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தலைமை காவல் செய்தி தொடர்பாளர், உதவி காவல் ஆணையர் அகமது ஷிஃபான் தெரிவித்துள்ளார். மாலத்தீவு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் அரசியல் நியமனம் பெற்றவர் என்று பட்டியலிடப்பட்ட ஷம்னாஸ் இப்போது பட்டியலில் இல்லை. அவரது பெயர் ‘முன்னாள்’ அரசியல் நியமனம் பெற்றவர்களின் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஷாம்னாஸ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் கணவர் இருவரும் முன்பு நகரின் மேயராக இருந்தபோது முய்சுவுடன் பணியாற்றியுள்ளனர். கடந்த ஆண்டு, மாலத்தீவின் ஜனாதிபதியாக முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷாம்னாஸ் கவுன்சிலில் இருந்து ராஜினாமா செய்தார் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார்.
ரமீஸ், முய்ஸுவின் நெருங்கிய உதவியாளராக அறியப்பட்டார். எனினும், அவர் கடந்த ஐந்து மாதங்களாக மக்கள் பார்வைக்கு வரவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், இந்த வழக்கு குறித்து மாலத்தீவு அரசாங்கமோ அல்லது ஜனாதிபதி அலுவலகமோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், மாலத்தீவு நாட்டின் அதிபருக்கே, அவருடன் பணியாற்றுபவரே சூனியம் வைத்த நிகழ்வு பெரும் பேசு பொருளாகி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் , மூட நம்பிக்கைகள் தொடர்பாகவும் விமர்சித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)