மேலும் அறிய

Israeli PM: "ஆமா, நாங்க தான் 40 பேர கொன்னோம்” - பேஜர் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற இஸ்ரேல் பிரதமர்

Israeli PM: ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான பேஜர் தாக்குதலுக்கு நானே அனுமதி அளித்தேன் என, இஸ்ரேல் பிரதமர் நேதய்ன்யாகு தெரிவித்துள்ளார்.

Israeli PM: ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான பேஜர் தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் நடத்திய பேஜர் தாக்குதல்:

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பேஜர் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டு 3,000 பேர் காயமடைந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, லெபனானில் நடந்த அந்த தாக்குதல்களுக்கு நானே ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தனியாட் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “"லெபனானில் பேஜர் தாக்குதல் நடத்த கிரீன் சிக்னல் கொடுத்ததை நெதன்யாகு ஒப்புக்கொண்டார்," என்று அவரது செய்தித் தொடர்பாளர் ஓமர் டோஸ்ட்ரி தெரிவித்துள்ளார். மேலும், “பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் முக்கிய நபர்களின் எதிர்ப்பையும் மீறி பேஜர் நடவடிக்கை மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் கொலை மேற்கொள்ளப்பட்டது” என்று நெதன்யாகு கூறியதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

பேஜர் வெடிப்பில் 40 பேர் உயிரிழப்பு

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடந்த பேஜர் வெடிப்பு, கடந்த ​​செப்டம்பரில் லெபனான் முழுவதும் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக அரங்கேறியது.  ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய அந்த கையடக்க சாதனங்கள் வெடித்ததில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் லெபனானில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என அப்போதே ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டி வந்த நிலையில், இஸ்ரேல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்த விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளது.

பேஜர்கள் வெடித்தது எப்படி?

பேஜர் தாக்குதல்கள் லெபனானை உலுக்கிய சில நாட்களுக்குப் பிறகு, தி நியூயார்க் டைம்ஸில் வெளியான செய்தி அறிக்கையில், ஷெல் நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை இஸ்ரேல் திட்டமிட்டு, சில கிராம் வெடிமருந்துகளுடன் சாதனங்களை தயாரித்து ஹிஸ்புல்லாவுக்கு விநியோகித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முழு நடவடிக்கையும் இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பால் மிகவும் சிக்கலான முறையில் திட்டமிடப்பட்டதாகவும், அது நிறைவேற்றப்படுவதற்கு சில மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் தொழில்நுட்ப பயன்பாட்டை குறைக்க முடிவு செய்தபோது, அந்த தகவலை உணர்ந்த இஸ்ரேல் உடனடியாக பேஜர் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

பேஜர் பயன்பாட்டை விரிவாக்க நஸ்ரல்லா முடிவு செய்வதற்கு முன்பே இஸ்ரேல் ஷெல் நிறுவனத்தை நிறுவுவதற்கான திட்டத்தைத் தொடங்கியது. ஹிஸ்புல்லா தலைவர் மிக நீண்ட காலமாக பேஜர்களில் முதலீடுகளை அதிகரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்பது ஏற்கனவே பரவலானதால் இஸ்ரேல் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது..

லெபனானில் வெடித்த பேஜர்களை ஹிஷ்புல்லா வாங்கிய தைவானிய நிறுவனமான கோல்ட் அப்பல்லோவின் சார்பாக ஹங்கேரியை தளமாகக் கொண்ட BAC கன்சல்டிங் நிறுவனம் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக தன்னை சித்தரித்துக்கொண்டது. இருப்பினும், உண்மையில், அந்த நிறுவனம் இஸ்ரேலால் நடத்தப்பட்டது மற்றும் பேஜர்களை உருவாக்கியவர்கள் இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகள் என்று அந்த செய்தி அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget