மேலும் அறிய

South Africa: தங்கச் சுரங்கங்கத்தில் திடீர் வெடி விபத்து.. 31 தொழிலாளர்கள் உயிரிழப்பு - பெரும் சோகம்..!

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கச்சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியான சம்பவம் ஒரு மாதத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கச்சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியான சம்பவம் ஒரு மாதத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

தங்கச்சுரங்கம்:

உலகின் இரண்டாவது பெரிய கனிம வளங்களை கொண்ட நாடாக ஆப்பிரிக்கா உள்ளது. இங்குள்ள பல சுரங்கங்கள் கைவிடப்பட்ட தங்க சுரங்களாக உள்ளது. ஆனால் பல சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல சட்டவிரோத குழுக்கள்  செயல்பட்டு வருகிறது. பக்கத்து நாடுகளில் வேலை வாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடும் மக்கள் இங்கு இடம் பெயர்ந்து இத்தகைய சுரங்களில் பணியாற்றி வருகின்றனர். 

மூடப்பட்ட சுரங்கம் என்பதால் எத்தகைய பராமரிப்பும் இன்றி எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில் சட்ட விரோத குழுக்களால் இவை செயல்பட்டு வருகின்றன. கைவிடப்பட்ட சுரங்கள் ஏற்கனவே பல அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு இருக்கும் என்பதால் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு சில இடங்களில் சுரங்களை தகர்க்க வெடி மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இந்த குழுக்களின் ஒரே இலக்கு தங்கம் மட்டும் தான் என்கிற நிலையில் தொழிலாளர்களின் உயிரெல்லாம் தூசி அளவு கூட மதிக்கப்படவில்லை. 

31 பேர் உயிரிழப்பு:

இப்படியான நிலையில் தென்னாப்பிரிக்காவின் பழைய தங்கச் சுரங்கப் பகுதியில் நடந்த விபத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர். மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள வெல்கோம் நகரில் உள்ள அந்த சுரங்கத்தில் அண்டை நாடான லெசோதோவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய தங்கச் சுரங்க நிறுவனமான ஹார்மனிக்கு சொந்தமான இந்த சுரங்கம் 1990 ஆம் ஆண்டிலேயே மூடப்பட்டிருந்தது. அங்கிருந்த கனிம வளங்கள் தீர்ந்து விட்டதால் மூடப்பட்ட இந்த சுரங்கத்தில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் கடந்த மே 18 ஆம் தேதி  நடந்த எதிர்பாராத வெடி விபத்தில் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இதில் 31 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்லனர். தங்களது  உறவினர்களைக் காணவில்லை  என தொழிலாளர்கள் தரப்பு குடும்ப உறுப்பினர்கள் புகார் அளித்த பின் தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுரங்கத் தொழிலாளர்கள் இறந்ததாகக் கருதப்படும் சுரங்கத்தில் மீத்தேன் வாயு அளவு ஆபத்தான முறையில் இருப்பதால் அவர்களின் உடலை தேடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய கனிம மற்றும் எரிசக்தி வளத் துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget