மேலும் அறிய

Afghanistan quake: ''எல்லாரும் எங்க போய்ட்டீங்க?'' - நிலநடுக்கத்தில் பலியான ஓனரின் குடும்பத்தை தேடி அலையும் நாய்!

Afghanistan quake: தன் ஓனரின் குடும்பத்தினரை அடிக்கடி வந்து இந்த நாய் பார்த்து செல்கிறது

நடைப்பழக தொடங்கியிருந்த ஒருநாளில், ஒரு குடும்பம் நாய்க்குட்டி ஒன்றை அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றது. அவர்கள் சின்னஞ்சிறு உயிரை வரவேற்று கொண்டாடினார்கள். நாட்கள் நகர்ந்தன. திடீரென வளர்ந்த நாயை வீட்டில் வைத்திருப்பதில் சிக்கல் ஏற்பட்டது. என்ன தருகிறார்களோ அதைச் சாப்பிட்டு, வீட்டு வாசலில் ஒரு ஓரத்தில் தூங்கி, முப்பொழுதும் வீட்டுக்காவலில் ஈடும் ஜீவன். ஒருவரையும் ஏதும் செய்யமால் இருந்தாலும், அந்த வீட்டுக்கு வருவோர்க்கு நாயைக் கண்டால் அப்படி ஒரு பயம். நாயை வீட்டிலிருந்து வெளியேற்ற இந்த ஒரு காரணம் போதும்தானே. எந்த குற்றமும் செய்யாத நாயை வீட்டிலிருந்து பத்து பதினைந்து தெரு தள்ளி ஒரு இடத்தில் கொண்டுபோய் விட்டனர். எப்போதும் தன்னைச் சுற்றி அவ்வளவு பேர் இருந்துவிட்டு, இப்போது யாரும் இல்லை என்ற ஏக்கம் அந்த நாய்க்கு.. தன் வீட்டைத் தேடி வந்தடைந்தது. ஆனால், நாயின் வரவு அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. வெளியேற்ற அடுத்த திட்டம் தயார்.

அன்பு நாயை ஒரு பேருந்தில் ஏற்றி வேறு ஊருக்கு அனுப்பி வைத்தாயிற்று.. இது குடும்ப உறுப்பினர்களுக்கு சற்று நிம்மதியா அமைந்தது. இனி வீட்டிற்கு வருபவர்கள் பயமில்லாமல் இருக்கலாம். ஒரு வாரம் கடந்திருக்கும்.. அதிகாலை வாசல் கதவை திறந்தவர்களுக்கு அதிர்ச்சி; அவர் வளர்ப்பு நாய் வீட்டு வாசலில் படுத்திருந்தது. செல்லப்பிராணிகள் தங்கள் வீட்டையும், தன்னுடன் இருந்தவர்களை மறப்பதில்லை. பின்னாளில், சாலையைக் கடக்கும்போது ஏற்பட்ட விபத்தில் அந்த நாய் உயிரிழந்துவிட்டது.- இப்படி நாய்களை வளர்ப்பவர்களுக்கு பல நிகழ்வுகள் இருக்கும். நாய்கள் தங்கள் குடும்பத்தை, வளர்த்தவர்களை அவ்வளவு எளிதில் மறந்துவிடாது. கொரோனா காலத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்த தன்னை வளர்த்தவரை தினமும் வந்து பார்த்துவிட்டு செல்லும். அவர் இறந்த பின்பும், அந்த மருத்துவமனைத்து ஒரு வாரத்திற்கும் மேல் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதாக செய்திகளில் வாசித்திருப்போம். 

போலவே, இன்னுமொரு நிகழ்வு- ஆப்கானிஸ்தான் நாட்டில் தன் வாழ்ந்த வீட்டையே பல நாட்களுக்கு சுற்றி வரும் நாய் ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரவேற்பை பெற்றுவருகிறது. பலரும் நாயின் எதிர்பாராத அன்பை பாராட்டி வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தங்களது உறவுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பல வீடுகளில் வளர்த்த, உயிர்தப்பிய செல்லப்பிராணிகள் தங்களது குடும்பத்தினரை தேடிவரும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

Samira SR என்ற டிவிட்ட பயனாளி ஒருவர், ஆப்கானிஸ்தானில் நாய் ஒன்று தன்னுடை வீட்டிலுள்ள அனைவரையும் நிலநடுக்கத்தில் இழந்துவிட்டது. இடிந்து கிடக்கும் வீட்டில் அருகே, அவர்களைத் தேடி ஒரு வாரமாக சுற்றி திரிந்து வருவதாக கூறியுள்ளார். தன்னை வளர்த்தவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறியாமல் அன்புடன் தேடும் நாயின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சமீரா தனது ட்விட்டர்  பதிவில் "  ஒச்கி கிராமத்தில் இந்த நாய் வசித்துவந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்துவிட்டார்கள்.  இந்த நாயினை அருகில் வசிப்பவர்கள் தற்போது வளர்த்து வருகிறார்கள். இருப்பினும், தான் வாழ்ந்த வீட்டை, தன் ஓனரின் குடும்பத்தினரை அடிக்கடி வந்து இந்த நாய் பார்த்து செல்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேசமிகு நாயின் இச்செயல் இண்டர்நெட்டில் பகிரப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் கடந்த வாரம்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 6.1 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.

20 ஆண்டுகளில் இல்லாத பயங்கரம்:

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன. இதனால் கடுமையான நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் தலிபான் அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 

Freelancer Jhansi Rani. MA

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Udhayanidhi Stalin: பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
Musk Targets Trump: “நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
“நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
TVK Vijay: விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Udhayanidhi Stalin: பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
Musk Targets Trump: “நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
“நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
TVK Vijay: விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
DMK: ”இதுதான் போதைப்பொருளை ஒழிக்கும் லட்சணமா?” திமுக அரசில் காவல்துறை சூப்பர்? கெட்டொழியும் இளசுகள்
DMK: ”இதுதான் போதைப்பொருளை ஒழிக்கும் லட்சணமா?” திமுக அரசில் காவல்துறை சூப்பர்? கெட்டொழியும் இளசுகள்
Southern Railway: சரக்கு ரயில் விபத்து; மாற்றுப் பாதையில் செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் - முழு விவரங்கள் இதோ
சரக்கு ரயில் விபத்து; மாற்றுப் பாதையில் செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் - முழு விவரங்கள் இதோ
TVK Vijay: நீங்க எதுக்கு? Sorryமா சர்காராக மாறிய திமுக அரசு - மு.க.ஸ்டாலினை விளாசித்தள்ளிய விஜய்
TVK Vijay: நீங்க எதுக்கு? Sorryமா சர்காராக மாறிய திமுக அரசு - மு.க.ஸ்டாலினை விளாசித்தள்ளிய விஜய்
Embed widget