மேலும் அறிய

Myanmar Landslide: மியான்மர் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு.. 2 பேர் உயிரிழப்பு.. தேடுதல் பணி தீவிரம்..

மியான்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் ஜேட் கனிமத்தை பிரித்தெடுக்கும் சுரங்கங்கள் அங்கு செயல்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்ப்பாராத வகையில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். அதுமட்டுமின்றி இந்த நிலச்சரிவில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.  இந்த சம்பவம் நேற்றைய முன் தினம் நடந்துள்ளது.

2020 இல் மியான்மரில் கச்சின் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் தொடர் கனமழைக் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

அதிக லாபம் தரும் ஜேட் சுரங்கத் தொழில் பெரும்பாலும் ஒழுங்குப்படுத்தப்படாமல் உள்ளது. இதில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், இது போன்ற கோர விபத்துகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

” ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்தில் சுமார் 25 பேர் காணாமல் போயுள்ளனர். இங்கு செல்வது கடினம் என்பதால் எங்களிடம் விரிவான பட்டியல் கிடைக்கவில்லை" என் மீட்புப் பணியாளர் ஒருவர் சம்பவ தொடர்பாக தெரிவித்துள்ளார். சுரங்க பணிகள் நடைபெற்ற நிலையில்,  சுமார் 150-180 மீட்டர் (500-600 அடி) உயரமுள்ள ஒரு பாரிய மண் குவியல் கடுமையான மழையால் தளர்ந்து சரிந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில பணியாளர்கள் ஜேட் சுரங்கப்பணிகளுக்காக திரும்பியுள்ளனர். தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் இதுவரை எந்த உடலும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு மீட்பு படை வீரர் கூறுகையில், இரண்டாவது முறை நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருந்தாலும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

மழைக்காலத்தில் வழக்கமாக சுரங்கத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும், ஆனால் நிலச்சரிவில் சிக்கியவர்கள், ஜேட் கனிமத்தை தேடி வந்த உள்ளூர்வாசிகள் என்றும் அங்கிருந்த தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான சீனாவில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்து இங்கு வந்து ஜேட் கணிமத்தை எடுக்கும் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒழுங்குப்படுத்தப்படாத இந்த சுரங்கப் பணியில் ஆண்டுதோறும் ஏராளமான தொழிலாளிகள் உயிரிழக்கும் அவலம் ஏற்படுகிறது.  ஜேட் மற்றும் மியான்மரின் வடக்கில் உள்ள மரங்கள், தங்கம் மற்றும் அம்பர் உள்ளிட்ட ஏராளமான இயற்கை வளங்கள் காச்சின் இன கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்கு நிதியளிக்க உதவியுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
Porur - Poonamallee metro train: சென்னை மக்களுக்கு ஹேப்பி.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget