![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மத்தியஅரசு வழிகாட்டுதலில் புதுச்சேரியில் முதன்முறையாக புஷ்கரணி விழா - டிச.25, 26 தேதிகளில் நடக்கிறது
’’மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக வழிகாட்டுதல் படி புதுச்சேரி சுற்றுலாத் துறையும், இந்து சமய நிறுவன ஆணையகம் இணைந்து புஷ்கரணியை நடத்துகின்றனர்’’
![மத்தியஅரசு வழிகாட்டுதலில் புதுச்சேரியில் முதன்முறையாக புஷ்கரணி விழா - டிச.25, 26 தேதிகளில் நடக்கிறது The first Pushkarani festival will be held in Pondicherry on December 25 and 26 under the guidance of the Central Government. மத்தியஅரசு வழிகாட்டுதலில் புதுச்சேரியில் முதன்முறையாக புஷ்கரணி விழா - டிச.25, 26 தேதிகளில் நடக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/20/7e3c71a06202134c0c8a7c93f180bdc5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வடமாநிலங்களில் நடப்பதை போன்று புதுச்சேரியில் வரும் 25ஆம் தேதியும், காரைக்காலில் வரும் 26 ஆம் தேதியும் நதி திருவிழா நடைபெற உள்ளது. புதுச்சேரியில் வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரா கோயிலில் புஷ்கரணி விழா நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு முன் வரலாறு இல்லை என்பதால் இதுவே புதுச்சேரியில் முதல் முறையாக நடத்தப்படும் புஷ்கரணி விழாவாகும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியதன் மூலம் கோயில் திருப்பணிகள், படித்துறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேஷம் ராசிக்குரிய கங்கை நதிக்கு இணையான சங்கராபரணி நதியில் புஷ்கரணி விழா நடைபெற இருக்கிறது. புஷ்கரணி விழா சிறப்பாக நடைபெற வேண்டி சனிக்கிழமை தோறும் மாலை 6.30 மணி முதல் இரவு 7 மணி வரை கங்கா ஆரத்தி இங்கு நடத்தப்படுகிறது. இந்த நிலையில், வட மாநிலங்களில் நடைபெறுவதை போன்று முதல் முறையாக நதி திருவிழாவும் அரசு சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் நடக்கிறது. இது பற்றி அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கூறியதாவது, மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக வழிகாட்டுதல் படி புதுச்சேரி சுற்றுலாத் துறையும், இந்து சமய நிறுவன ஆணையகம், பிற அரசு துறைகள் இணைந்து புதுச்சேரி, காரைக்காலில் நதி திருவிழாவை நடத்த உள்ளன.
மேலும், வருகின்ற 25-ம் தேதி மாலை புதுச்சேரி திருக்காஞ்சி சங்கராபரணி கரையில் நதி திருவிழா நடக்கும். இதையொட்டி கரகாட்டம், மயிலாட்டம், காவடி, மேளம், தாளவாத்தியம், சிவவாத்தியம், தெருக்கூத்து, தப்பாட்டம் ஆகிய கலைநிகழ்வுகள் நடக்கும். அதை தொடர்ந்து கங்கா ஆரத்தி நடக்கும். அதே போல் காரைக்காலில் வரும் 26ம் தேதி மாலை காவிரிக் கரையில் நதி திருவிழா நடக்கும். காரைக்காலில் நடக்கும் இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
அதே போல் வரும் ஜனவரி 4 முதல் 7 ஆம் தேதி வரை 27வது அகில உலக யோகா திருவிழாவும் புதுச்சேரியில் நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் https://pondytourism.py.gov.in/yoga என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். உள்ளூர் மாணவர்களுக்கு பங்கேற்பு கட்டணம் இம்முறை இலவசமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காலை தியான பயிற்சி, இலவச யோகாப் பயிற்சி, யோகா கருத்தரங்கம், யோகாசனப் போட்டிகள், யோகா-இயற்கை சிகிச்சைகள் அடங்கிய நல்வாழ்வு கண்காட்சி, இயற்கை உணவு அங்காடி ஆகியவை அமையும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)