மேலும் அறிய

விரைவில் திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள் - சி.வி.சண்முகம்

எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. சிறைக்கு செல்ல தயாராக உள்ளோம் - சி.வி. சண்முகம்

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வுக்கு எதிராக எதிராக கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. 

ஆர்பாட்டத்தில் சிவி.சண்முகம் பேசியதாவது :-  

திமுக அரசுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் மற்றொரு செய்தி சொல்கிறோம். இன்றைக்கு அதிமுகவில் மூன்று முறை முதல்வர் பதவியை அனுபவித்துவிட்டு, கட்சி அலுவலகத்தை எட்டி உதைத்து, அலுவலகத்தை சூறையாடி பத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் திருடி சென்றுவிட்டனர். அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்து அதிமுகவை முடக்கிவிடலாம் என நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்காது. ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை நம்பியுள்ளேன் என கூறி வருகிறார். ஆனால் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அவர் பக்கம் ரவுடிகளும், குண்டர்களுமே உள்ளனர். தொண்டர்கள் உள்ளவரை யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. நூறு பன்னீர்செல்வம் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது, நூறு துரோகிகளை அதிமுக பார்த்துள்ளது. பன்னீர்செல்வம் போன்று சின்னத்தையும், கட்சியையும் முடக்க நினைத்தவருக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி.

இன்றைக்கு மின்சார கட்டணம் மட்டும் உயர்த்தப்படவில்லை, ஆண்டுக்கு 6 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும். விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்திற்கும் மீட்டர் பொருத்தப்படவுள்ளது. அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு போட்டால் நாங்கள் பயந்துவிடுவோமா. திமுகவின் 13 அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. விரைவில் திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள். முதலில் மின்சாரத்துறை அமைச்சர் நிச்சயம் சிறை செல்வது உறுதி. அதனை தொடர்ந்து ம.சுப்ரமணியம் உட்பட அனைத்து அமைச்சர்களும் சிறைக்கு செல்வர்.

எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. சிறைக்கு செல்ல தயாராக உள்ளோம் என பேசினார். நாங்கள் சிறைக்கு செல்வது ஒன்னும் புதிதல்ல. ஏற்கனவே நங்கள் ஏழு, எட்டு முறை சிறைக்கு சென்றுள்ளோம். இனி ஆறு மாதம் சிறைக்கு சென்றாலும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என சிவி.சண்முகம் பேசினார்.

திண்டிவனத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் ஆய்வு :

விழுப்புரம் : திண்டிவனம் பகுதியில் சாலையின் நடுவே இருக்கின்ற மரத்தை அகற்றாமல் சாலை போடும் பணி நடைபெற்றுகிறது, இதனை மாநிலங்களவை உறுப்பினர் சிவி.சண்முகம் இதுதான் திராவிட மாடலா என கேள்வி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் நெடுஞ்சாலை தற்போது  இருவழி சாலையாக உள்ளது. இதனை இருபுறமும் விரிவுபடுத்தி நான்கு வழி சாலையாக மாற்றுவதற்காக ரூபாய் 320 கோடி ரூபாயில் திட்டம் தீட்டப்பட்டு அடிக்கல் நாட்டுப்பட்டு தற்போது பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், திண்டிவனம்- மரக்காணம்  சாலையில் சாலையின் நடுவில் இருக்கின்ற மரங்களை அப்புறப்படுத்தாமலும், மின்கம்பங்களை அப்புறப்படுத்தாமலும், இதே போன்று தரமற்ற கட்டுமான பொருட்களைக் கொண்டு சாலை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான  சிவி சண்முகம் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

பின்பு செய்தியாளர் சந்திப்பில் எம்பி சிவி சண்முகம் கூறியதவது :-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பபோதைய  திமுக ஆட்சியில் சாலை அமைக்கும் பொழுது சாலையில் உள்ள ஜீப்பை  அகற்றாமலும், அடிப்பம்பை அகற்றாமலும், குடிநீர் அடி பம்பை அகற்றாமலும் சாலைகள் அமைக்கப்பட்டது செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தார் போன்று   இந்த பகுதியில் சாலையின் நடுவில் இருக்கின்ற மரங்களை அகற்றாமல், அதே போன்று மின்கம்பங்களை அகற்றாமல், தரமற்ற சிமெண்ட்டுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

தங்களுக்கு 18% கமிஷன் மட்டும் வந்தால் போதும் என்று தரமற்ற மற்றும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடைபெறுகின்ற இத்தகைய பணிகளை தமிழக அரசும், நெடுஞ்சாலை துறையும் கண்டும் காணாமல் இருக்கின்றது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ? என்று மாநிலங்களை உறுப்பினர் சி.வி சண்முகம் கேள்வி எழுப்பினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அர்ஜுனன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget