மேலும் அறிய

எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதி ; ஆளுங்கட்சியானவுடன் நிறைவேற்றிய முதல்வர் - அமைச்சர் எ.வா.வேலு பெருமிதம்

முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கமும், 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை ஆளுங்கட்சியானவுடன் நினைவில் வைத்து நிறைவேற்றி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என விழுப்புரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டியில் முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் 5877 சதுர அடி பரப்பளவில் திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கமும், 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் 8477 சதுர அடி பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை வருகின்ற 29ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சார்பில் பத்தாயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்க உள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு, வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு: தென்னாடு மாவட்டத்தில் திராவிட இயக்கத்தினுடைய தலைவராக இருந்தவர், கலைஞருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் எ.கோவிந்தசாமி. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் வந்தபோது பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். அந்த அடிப்படையில் விழுப்புரத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.877 சதுர அடியில் மணிமண்டபம் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 21 சமூக நீதி போராளிகளுக்கு அவர்களை நினைவு கூறும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் ஐந்து கோடிய 75 லட்சம் திட்ட மதிப்பீட்டில், 8.417 சதுர அடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மணிமண்டபம் பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மண்டபமும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வருகின்ற 29ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பயனாளிகளுக்கு நலத்தட்டு உதவிகளையும் முதல்வர் வழங்கவுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.