மேலும் அறிய

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் புகார் : 40 அதிகாரிகளிடம் விசாரணை

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக 4 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 25 பேரிடம் விசாரணை.

 சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக 4 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 25 பேரிடம் உதவி திட்ட அதிகாரி விசாரணை நடத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாவும், போலி ஆவணங்கள் தயாரித்து வேலைகள் ஏதும் செய்யாமல் குறைந்த மதிப்பீடு தயார் செய்து முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் புகார் எழுந்தது. மேலும் மேற்கண்ட காலக்கட்டத்தில் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், மேற்பார்வையாளர் உள்பட 40 பேர் மீது சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரிடம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசன் புகார் அளித்தார்.

11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?

இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அறிவுறுத்தினார். இதையடுத்து, முறைகேடு புகாரை விசாரிக்க மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் அன்னபூரணிக்கு மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகள், என்ஜினீயர்கள், உதவிப்பொறியாளர்கள் என 40 பேரும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி நேற்று சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் அன்னபூரணி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதில் 4 முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்பட 25 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 2 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.

பின்னர் இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- வளர்ச்சி தி்ட்டப்பணிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான முதல் கட்ட விசாரணையில் 25 பேர் நேரில் ஆஜராகி உள்ளனர். மீதமுள்ள 15 பேரிடமும் மற்றொரு நாள் விசாரணை நடைபெறும். விசாரணை முடிந்ததும் அதன் அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார். சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்பட 25 பேரிடம் நடைபெற்ற விசாரணையால் சங்கராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget