மேலும் அறிய

கடலூர்: சுரங்கப்பாதை சுவர்களில் இருந்து ஊற்றெடுக்கும் தண்ணீர்

’’தொடர் மழையால் நிலத்தடி நீர் மட்டம் பல்வேறு இடங்களில் உயர்ந்து வருகிறது இதன் காரணமாக இரயில்வே சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர்களில் நீர் கசித்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது’’

தமிழகத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரும்பாலன ஏரிகள் குளங்கள் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்தது. மேலும் தற்பொழுது கடந்த இரண்டு நாட்களாக மழை இன்றி காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் மழையால் பெரும்பாலன குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் மழையின் காரணமாக ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் பல இடங்களில் விளை நிலங்களுக்கு உள்ளும் தண்ணீர் புகுந்து உள்ளது, மேலும் ஒரு சில இடங்களில் மழைநீர் இன்னும் வடியாததால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
 

கடலூர்: சுரங்கப்பாதை சுவர்களில் இருந்து ஊற்றெடுக்கும் தண்ணீர் 
இந்நிலையில் கடலூர் மத்திய பேருந்து நிலையம் அருகே கடலூர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதிகளை இணைக்கும் இரயில்வே சுரங்கப்பாதை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. இந்த இரயில்வே சுரங்கப்பாதையில் தொடர்ந்து மழை காலங்களில் மழை நீர் தேங்கவுதால் குளம் போல் காட்சி அளிக்கும் ஆனால் மக்களின் பலதரப்பட்ட போராட்டத்திற்கு பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்பொழுது வடிகால் வசதி செய்யப்பட்டு தற்பொழுது பெய்த தொடர் மழையில் கூட மழை நீர் தேங்காமல் இருந்ததை காண முடிந்தது. ஆனால் தற்பொழுது பெய்த தொடர் மழையால் நிலத்தடி நீர் மட்டம் பல்வேறு இடங்களில் உயர்ந்து வருகிறது இதன் காரணமாக இரயில்வே சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர்கள் பல்வேறு பகுதிகளில் மற்றும் சுரங்கப்பாதையின் சாலை இருந்தும் திடீர் என தண்ணீர் ஊற்று எடுக்க தொடங்கி உள்ளது.
 
இதன் காரணமாக சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர்கள் பலம் இழக்கும் அபாயம் ஏற்படுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் மழையின் தாகமானது அதிகமாகக் கூடும் என்பதால் சுவர்கள் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளது, ஆகவே நிலைமை மேலும் மோசம் ஆவதற்கு முன்பாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த இரயில்வே சுரங்கப்பாதையைப் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊற்று சுறப்பதினை சரி செய்ய வேண்டும் எனவும் இல்லை என்றால் சுரங்கப்பாதையில் பயணம் செய்யும் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும் நிலை உள்ளது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஆசியாவையே மிரளவைத்த புதுச்சேரி! 8 மணி நேர வேலைக்காக உயிர் கொடுத்த 12 தியாகிகளின் உதிர வரலாறு!
ஆசியாவையே மிரளவைத்த புதுச்சேரி! 8 மணி நேர வேலைக்காக உயிர் கொடுத்த 12 தியாகிகளின் உதிர வரலாறு!
விஜய் மாடலில் ரங்கசாமி கோட்-சூட்! அஜித் ரேஸர் கெட்டப்... புதுச்சேரியில் தொண்டர்கள் செய்த சம்பவம்!
விஜய் மாடலில் ரங்கசாமி கோட்-சூட்! அஜித் ரேஸர் கெட்டப்... புதுச்சேரியில் தொண்டர்கள் செய்த சம்பவம்!
சொட்டுநீர் பாசனத்திற்கு 100% மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்: முழு விவரம் உள்ளே!
சொட்டுநீர் பாசனத்திற்கு 100% மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்: முழு விவரம் உள்ளே!
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget