மேலும் அறிய

இப்படி ஒரு குட் நியூஸ்ஹா..? கடலூருக்கு இப்படி ஒரு விடியலா? - என்ன திட்டம் தெரியுமா ?

கடலூர் மாநகரில் பிரதான பேருந்து நிலையம், லாரன்ஸ்ரோடு பகுதியில் முதற்கட்ட மின்கேபிள் புதைக்கும் பணிக்கு அரசு ரூ.245 கோடி ஒதுக்கீடு.

கடலூர்: கடலூர் மாநகரில் பிரதான பேருந்து நிலையம், லாரன்ஸ்ரோடு பகுதியில் முதற்கட்ட மின்கேபிள் புதைக்கும் பணிக்கு அரசு 245 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

மின்கேபிள் புதைக்கும் பணி - 245 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கடலூர் மாவட்டம், கடந்த 2011ம் ஆண்டு வீசிய தானே புயலால் பெரும் பாதிப்பிற்குள்ளானது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், டிரான்ஸ் பார்மர்கள், துணை மின் நிலையத்திற்கு வரும் உயர்மின் கோபுரங்கள் சாய்ந்தன. மாவட்டத்தின் தலைநகரான கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 4 நாட்களாக மின்சாரம் இல்லை. தலைமை செயலகத்திற்கு கூட தகவல் தெரிவிக்க மின்சாரம் இல்லாமல் அரசு அதிகாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கடலூர் மாவட்டமே தகவல் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. இந்த மின்தடையால் ஏற்பட்ட பாதிப்பு அரசுக்கு ஒரு பாடமாக இருந்தது. எதிர் காலத்தில் புயல், மழை, சுனாமி போன்ற பேரிடர் நிகழ்வின் போது மின்சாரம் முற்றிலும் தடைபட்டுவிடக்கூடாது என கருதி புதை வடமின்கேபிள் அமைக்க வேண்டும் என அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. பேரிடரில் அடிக்கடி பாதிக்கப்படுகிற மாவட்ட தலைநகரங்களில் புதைவட கேபிள் போட முடிவு செய்யப்பட்டது.

ஓராண்டு காலம் மின் கேபிள் வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது

உலக வங்கி உதவியுடன் இத்திட்டத்தை நிறைவேற்ற கடலூர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கடலூர் மாநகரம் மட்டும் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில் 2018ம் ஆண்டு கடலூர் மாநகரில் 2 கட்டமாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன. இதில் கடலோர கிராமங்களுக்கு தனிக்கவனம் செலுத்தி கேபிள் போடப்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்ட 2, 3 பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஓராண்டு காலம் மின் கேபிள் வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் தொழிற்சாலைகளுக்கு ஜெனரேட்டர் இயக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதால் பல லட்சம் ரூபாய் எரிபொருள் மிச்சமாகி இருக்கிறது. அதேப்போல மின்வாரி யத்திலும் மின்சாரத்தை நிறுத்தி வைத்து பழுது அகற்றுவதால் ஏற்படும் இழப்பும் குறைந்துள்ள தால் மின்வாரியத்திற்கும் லாபமாக உள்ளது. முதல் கட்டத்தில் இது வரை மின்சார கேபிள் போடப்படவில்லை.

245 கோடி ரூபாய் ஒதுக்கீடு

அண்ணா மேம்பாலத்திற்கு மேற்கிழ் உள்ள பேருந்து நிலையம் அதை சுற்றியுள்ள பகுதிகள், திருவந்திபுரம் சாலையில் நகராட்சி எல்லை வரை, வடக்கு பகுதியில் கம்மியம்பேட்டை பாலம் வரையும், தெற்கே மோகினிப்பாலம் வரையிலும் முதற்கட்ட பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி முழுதும் மின் கேபிள் அமைக்க வேண்டும். ஆனால் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் பிசியாக இருக்கும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மின் கேபிள் அமைக்க வேண்டும். ஆனால் அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு பெற முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன.

இத்திட்டத்திற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் கடலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சேர்த்து 490 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதில் கிட்டதட்ட 245 கோடி கடலூர் மாவட்டத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
ஐ.நாவின் 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' விருது வென்ற கூடுதல் தலைமை செயலாளர் - சுப்ரியா சாகு சாதித்தது என்ன?
ஐ.நாவின் 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' விருது வென்ற கூடுதல் தலைமை செயலாளர் - சுப்ரியா சாகு சாதித்தது என்ன?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
Embed widget