மேலும் அறிய

சந்திராயன் 3 ல் வெற்றி பெற்றது எப்படி? - திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் அசத்தல் பேச்சு

சந்திராயன் 3 திட்டம் வெற்றி பெறுவதற்கு காரணம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்தால் வெற்றி பெற முடிந்தது - வீரமுத்துவேல்

விழுப்புரம்: நேர்மையுடனும், அர்ப்பனிப்புடனும், ஒழுக்கத்துடனும், சரியாக திட்டமிட்டதை மாற்றமின்றி செயல்படுத்தியதால் சந்திராயன் 3 ல் வெற்றி பெற முடிந்ததாக அத்திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். 
 
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் ரயில்வே பள்ளி மாணவர்கள் இணைந்து சந்திராயன் 3 வெற்றி பெற உறுதுனையாக இருந்த அத்திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து பள்ளியில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் மாணவர்களை சந்தித்து உரையாடினார்.
 
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மேடையில் பேசிய சந்திராயன் 3 திட்டஇயக்குனர் வீரமுத்துவேல், இத்திட்டம் வெற்றி பெற்ற பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருந்தாலும் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருவதாகவும் அதிக அளவு படிக்கும் திறன் கொண்ட மாணவர் தான் அல்ல என்றும் சாதாரணமாக நடுத்தரமாக படிக்கும் மாணவனாக இருந்து படிப்பினை விட ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை கடை பிடித்து பின்பற்றி வருவதாகவும் இரண்டாமாண்டு டிப்ளமோ படிக்கும் போதே மெக்கானிக்கலில் ஆர்வம் இருந்தது அதனை நோக்கி பயணித்ததாக தெரிவித்தார்.
 
ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தது விழுப்புரம் ரயில்வே பள்ளி தான் என்றும் இஸ்ரோவில் படிப்பறிவில் அறிவியலில் கைதேர்ந்தவர்கள் உள்ள நிலையில் தனக்கு சந்திராயன் 3 ல் வாய்ப்பு கிட்டியதாகவும் அதில் எடுத்த வேலையின் மீது நேர்மையுடன் செயல்படுவது அர்பணிப்புடன் செயல்படுவது ஒழுக்கமாக செயல்படுவது ஆகிய மூன்றையும் கடைபிடித்ததால் என்னால் சந்திராயன் 3 வெற்றி பெற்றதாகவும் சிலர் இதனை கடைபிடிக்க முடியாமல் இருப்பதால் வெற்றி பெற இயலவில்லை என கூறினார். 
 
சந்திராயன் 3 திட்டம் வெற்றி பெறுவதற்கு காரணம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்தால் வெற்றி பெற முடிந்தததாகவும், 
ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் நிலவின் தென் துருவத்தில் செயற்கைகோளை இறக்கும் நிகழ்வில் தோல்வி சந்தித்தாலும் இந்தியா அதில் வெற்றி பெற்றுள்ளது அதற்கு காரணம் திட்டமிட்டதை எந்த வித மாற்றமும் இல்லாமல் சரியாக செய்ததால் வெற்றி பெற முடிந்தததாகவும், தன்னுடன் பணிபுரிவரக்ள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணி செய்ததால் வெற்றி பெற முடிந்ததாக வீரமுத்துவேல் தெரிவித்தார். 
 
ரோவரில் உள்ள கேமரா மூலம் போட்டோ எடுக்கப்பட்டு மூன்று நாட்கள் கண்காணித்து அதன் பிறகு சந்திராயன் 3 செயற்கைகோள் தரையிறக்கியதாகவும்,  நிலவில் ஜிபிஎஸ் கிடையாது இருப்பினும் இஸ்ரோவில் இருந்து திட்டமிடலின் மூலம் எப்படி நிலவின் ஈர்ப்புவிசைக்கு ஏற்றவாறு இறக்க வேண்டுமென கருதினோமோ அதன்படியே செயல்பட்டு செயற்கை கோளை தரையிறக்கம் செய்ததாகவும், தான் பயின்ற விழுப்புரம் ரயில்வே பள்ளியின் அறிவியல் ஆசிரியர் எனது காதினை திருகியது,பள்ளியில் பயின்றது விளையாடியது தன்னுடன் பழகிய நண்பர்கள் யாரையும் மறக்க முடியாது என தெரிவித்தார். 
 
மேலும் நான் பயின்ற பள்ளி ஆசிரியர்களுடன் இன்று மேடையில் அமர்ந்திருந்தபோது ஆசிரியர்கள் மீதான பயத்தோட தான் அமர்ந்திருந்ததாகவும், வரலாற்று ஆசிரியரை என்னால் மறக்கவே முடியாது ஒழுக்கமாக மாணவர்கள் இருக்க வேண்டும் என்பதை கற்று கொடுத்தவர் அவர் தான் என்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவேனா என்று எண்ணம் இருந்த நேரத்தில் சரியாக வழி நடத்திய ஆசிரியராக இருந்ததாக வீரமுத்துவேல் கூறினார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Embed widget