மேலும் அறிய

புதுச்சேரி : தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.. கேரட், நவதானியம் என சத்தான உணவை சாப்பிடுங்கள் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் 1 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.

புதுச்சேரியில்  15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புதுவையில், தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். 

பின்னர் ஆளுநர் தமிழிசை கூறியதாவது:-

புதுச்சேரி  சுகாதாரதுறையை பாராட்டுகிறேன். புதுவையில் 82 சதவீதம் பேர் முதல் தவணையும், 58 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இன்னும் 1 லட்சம் பேர் தடுப்பூசி போட வேண்டும். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்களை பார்த்து பயந்த, திட்டிய பெரியவர்களை பார்த்துள்ளோம். ஆனால், இளைஞர்கள் ஒருவர் கூட மறுக்கவில்லை. பெரியவர்களை விட இளையவர்கள் மிக பொறுப்பானவர்கள். கொரோனா இல்லாத காலத்தில் இந்த இளைஞர்கள் வாழ வேண்டும். 


புதுச்சேரி : தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.. கேரட், நவதானியம் என சத்தான உணவை சாப்பிடுங்கள் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

விழாவில் பூக்கொத்து கொடுக்காமல் தேவையான புத்தகங்களை அளித்திருப்பது பாராட்டத்தக்கது. தடுப்பூசியுடன் சத்தான உணவு அவசியம். பீசா, பர்கரில் சத்து இல்லை. நவதானியம் சாப்பிடுங்கள். கேரட்டை கடித்து சாப்பிடுங்கள். எலுமிச்சை சாறு குடியுங்கள். ரூ.150 கோடிக்கு மேல் நம் நாட்டில் தயாரித்த தடுப்பூசியை பெருமையுடன் கூற வேண்டும். தெலுங்கானாவில் உள்ள பயோடெக் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

24 மணி நேரமும் ஆராய்ச்சியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பிரதமர் நேரில் சந்தித்து ஊக்கமளித்தார். நாம் அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.  அன்றைய பாடத்தை அன்றே படியுங்கள். மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களாக வர வேண்டும். எந்த காரணத்திற்கும் மகிழ்ச்சியை தொலைக்காதீர்கள். கஷ்டத்தை ஆசிரியர்களிடம் கூறுங்கள். பெரியவர்கள் தடுப்பூசிக்கு  பயந்து ஓடினார்கள். குழந்தைகளில் சுணக்கம் இல்லை. இனி பெரியவர்கள் தடுப்பூசி போட மாட்டேன் என்பது மன்னிக்க கூடியதில்லை. 

பல மாநிலங்களில் வேகமாக நோய் பரவுகிறது. தடுப்பூசி போட்டவர்களை தொற்று அபாயகரமாக தாக்குவதில்லை. புதுவையில் தேசிய இளைஞர் விழாவை காணொலியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பள்ளி மாணவர்களின் அக்கறையில்  ஜாக்கிரதையாக இருக்கிறோம். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பள்ளிகளை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget