மேலும் அறிய

போதிய மருத்துவர்கள் இல்லாத வந்தவாசி அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி

வந்தவாசி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி. சிறு சிறு காயங்கள் கூட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் அவலம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது‌. இதில் 1லட்சத்து 20 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வந்தவாசியை சுற்றிலும் உள்ள பொதுமக்கள் விவசாயிகள், விவசாய கூலி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அருகில் உள்ள சிட்கோ போன்ற தொழில் நிறுவனத்திற்கு பணிகளுக்கு செல்வார்கள். இந்த நிலையில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு திடீரென விபத்து ஏற்பட்டால் படுகாயம் அடைந்தவர்கள் வந்தவாசி உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லவேண்டும், மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் மருந்து உள்ளதாக பெயர்பலகை வைத்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் உடல்நிலை சரியில்லாமல் விபத்து போன்றவையால் சென்றால் அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சைகள் அளிக்க மருத்துவர்கள் இல்லை, அதோடு மட்டுமல்லாமல் செவிலியர்களும் இல்லை.


போதிய மருத்துவர்கள் இல்லாத வந்தவாசி அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி

ஆபத்தான நிலையில் செல்லும் பொதுமக்களுக்கு ஏமாற்றங்கள் மட்டும் மிஞ்சுகிறது. பாதிப்புள்ளானவர்களை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படும் சூழ்நிலையில் இருந்து வருகிறது. மேலும் இரவு நேரத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிறு சிறு காயங்களுக்கு கூட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படும் ஒரு அவல நிலை வந்தவாசி மருத்துவமனையில் ஏற்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி செங்கல்பட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் வந்தவாசியில் இருந்து போதிய பேருந்து வசதிகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட மேல்மருவத்தூர் சென்று அதன் பிறகு தான் செங்கல்பட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகளும் உள்ளது.

 


போதிய மருத்துவர்கள் இல்லாத வந்தவாசி அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி

 

மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டவில்லை, மருத்துவமனையில் போதிய உபகரணங்களும் இல்லை. முதல்வரின் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம், மக்களை தேடி மருத்துவம், என்று கூறிவரும் நிலையில் மக்களே வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  இது குறித்து மருத்துவர்கள் வட்டாரத்தில் பேசுகையில் போதிய மருத்துவர்கள் உள்ளதாக தெரிவித்தனர்.

உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

Engineering Admission: முடிந்த 3 கட்டக் கலந்தாய்வு; அதிகரித்த மாணவர் சேர்க்கை, 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்ந்த மாணவர்கள்- ஓர் அலசல்!

தலைப்பு செய்திகள்

Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget