மேலும் அறிய

வேலூர் அருகே கணவன் குடிப்பழக்கத்தை விட மறுத்ததால் தீக்குளித்து உயிரிழந்த மனைவி...!

’’விஜயனிடம்  குடிப்பழக்கத்தை கைவிடுமாறும் இல்லையெனில் தான் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுவேன் என பிரியா எச்சரித்துள்ளார்’’

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சிக்குட்பட்ட லிங்குன்றம் ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி விஜயனுக்கும் (40) ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா பகுதியை சேர்ந்த பிரியாவுக்கும் (37) கடந்த 17 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மோகன்குமார் (16) என்ற மகனும், மாதவி (10 ) என்ற மகளும் உள்ளனர். தினக்கூலியாக கட்டிட வேலை செய்து வரும் விஜயனுக்குச் சமீப காலமாக மதுப்பழக்கம் அதிகரித்ததால் மனைவி பிரியா உடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
 

வேலூர் அருகே கணவன் குடிப்பழக்கத்தை விட மறுத்ததால் தீக்குளித்து உயிரிழந்த மனைவி...!
 
இதேபோன்று நேற்று இரவு 10 மணிக்கு கணவன் மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது பிரியா விஜயனிடம்  குடிப்பழக்கத்தை கைவிடுமாறும் இல்லையெனில் தான் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுவேன் என்று எச்சரித்துள்ளார். இதற்கு விஜயன் தனது தரப்பிலிருந்து பதில் ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது . இந்நிலையில் இரவு 10.30 மணி அளவில் அவர்களது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள காலி இடத்தில் பிரியா எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த மகன் மதன்குமார் மற்றும் மகள் மாதவி ஆகிய இருவருக்கும் கூட அவரது தாய் தற்கொலை செய்துகொண்டது தெரியவில்லை என்று கூறப்படுகின்றது.
 
மேலும் பிரியா எறிந்த நிலையில் இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக  இந்த சம்பவம் குறித்து தகவலை ஆற்காடு அடுத்த தாஜ்புரா கிராமத்தில் வசிக்கும்  பிரியாவின் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளனர். சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இரவோடு இரவாக குடியாத்தம் வந்தடைந்தனர். மேலும் அவர் இறந்து தொடர்பான புகாரை பிரியாவின்  மூத்த சகோதரர் சுரேஷ் என்பவர் குடியாத்தம் நகரக் காவல் நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.

வேலூர் அருகே கணவன் குடிப்பழக்கத்தை விட மறுத்ததால் தீக்குளித்து உயிரிழந்த மனைவி...!
 
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் துணை காவல்துறை சூப்பிரண்டு ராமமூர்த்தி நகர காவல்நிலைய  ஆய்வாளர் லட்சுமி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இன்று காலை 4 மணி அளவில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் முதற்கட்ட விசாரணைக்குப் பின்பு பிரியாவின் சடலத்தைக்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . 
 
பிரியா தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொண்டார் என அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கவே  குடியாத்தம் நகரக் காவல் நிலைய  காவல்துறை  அதிகாரிகள் சந்தேக மரணம் என்ற பிரிவில்  வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பிரியாவின் கணவர் விஜயனை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
Praggnanandhaa: என்னடா இது..! கார்ல்சனையே கதறவிட்ட குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா - பட்டம் போச்சா?
Praggnanandhaa: என்னடா இது..! கார்ல்சனையே கதறவிட்ட குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா - பட்டம் போச்சா?
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
Praggnanandhaa: என்னடா இது..! கார்ல்சனையே கதறவிட்ட குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா - பட்டம் போச்சா?
Praggnanandhaa: என்னடா இது..! கார்ல்சனையே கதறவிட்ட குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா - பட்டம் போச்சா?
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
Tamilnadu Roundup: அன்புமணியை நீக்கிய ராமதாஸ்.. இபிஎஸ் நாளை முதல் சுற்றுப்பயணம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அன்புமணியை நீக்கிய ராமதாஸ்.. இபிஎஸ் நாளை முதல் சுற்றுப்பயணம் - தமிழகத்தில் இதுவரை
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Embed widget