மேலும் அறிய

அங்கன்வாடி குழந்தைகள் உண்ணும் சத்துணவில் பல்லி? 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மாதனூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சாப்பிட்ட சத்துணவில் பல்லி இருந்ததாக எழுந்த சந்தேகத்தின்பேரில், 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருப்பத்தூரில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், உணவினை சாப்பிட்ட 13 குழந்தைகள் ஆம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது சோமலாபுரம். இங்கு செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 33 குழந்தைகள் பயின்றுவருகின்றனர். நேற்று (16.11.2021) செவ்வாய்க்கிழமை 17 குழந்தைகள் அந்த அங்கன்வாடி மையத்திற்கு வருகை தந்துள்ளனர். அங்கன்வாடி ஆசிரியர் அஞ்சலி என்பவர் குழந்தைகளுக்குப் பாடம் நடத்திய பின்னர், மல்லிகா என்ற சமையலர் சத்துணவைப் பரிமாறியுள்ளார். மதிய உணவு இடைவேளையில், குழந்தைகளுக்கு கலவைச் சாதம் உணவாக வழங்கப்பட்டது.

அங்கன்வாடி குழந்தைகள் உண்ணும் சத்துணவில் பல்லி? 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

குழந்தைகளின் வீடுகள் அருகிலேயே இருப்பதால், சிறிய குழந்தைகள் தானாக உண்ணாது என்பதால் சில பெற்றோர்கள் நேரடியாக வந்துவிடுவார்கள். உணவு நேரத்தின்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்களாகவே அங்கன்வாடி மையத்தில் கொடுக்கப்படும் உணவைக் குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டுச் செல்வது வழக்கம். அதன்படி 13 குழந்தைகளின் பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்திற்கு வந்து கொடுக்கப்பட்ட சத்துணவைக் குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு கொண்டு இருந்தனர். அப்போது ஒரு குழந்தையின் தாய், கொடுக்கப்பட்ட சத்துணவைக் குழந்தைக்கு ஊட்டும்போது அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் அங்கன்வாடி மைய ஆசிரியர் அஞ்சலியிடமும், சமையலர் மல்லிகாவிடமும் தகவல் தெரிவித்த நிலையில், அங்கு ஒரு குழந்தை திடீரென மயங்கி விழுந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்த அனைவரும் குழந்தைகளை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவா்களுக்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.

அங்கன்வாடி குழந்தைகள் உண்ணும் சத்துணவில் பல்லி? 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

அங்கன்வாடி குழந்தைகள் சாப்பிடும் உணவில் பல்லி விழுந்த செய்தியை கேட்டு மருத்துவமனைக்கு, எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோா் விரைந்து சென்று உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவா்களைக் கேட்டுக் கொண்டனா். அப்போது, மருத்துவா்களின் கண்காணிப்பில் குழந்தைகள் நலமாக உள்ளதாக மருத்துவ அலுவலா் ஷா்மிளா தெரிவித்தாா். ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக் குழு உறுப்பினா் முத்து, சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினா் சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். எந்த குழந்தைக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றாலும் சத்துணவில் பல்லி இருந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கோமதி உள்ளிட்டோா் அங்கன்வாடி மையத்தில் பணியாளா்களிடமும், அரசு மருத்துவமனையிலும் விசாரணை நடத்தினா். மேலும் குழந்தைகள் உடல்நலம் குறித்து ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Neeya Naana: மோசமான சூழலுக்குள் செல்கிறார்களா இளைஞர்கள்? - விவாதத்தை கிளப்பிய நீயா, நானா நிகழ்ச்சி
மோசமான சூழலுக்குள் செல்கிறார்களா இளைஞர்கள்? - விவாதத்தை கிளப்பிய நீயா, நானா நிகழ்ச்சி
Breaking News LIVE: தமிழ்நாட்டில் கோடை மழை 55% குறைவாக பெய்துள்ளது - வானிலை மையம்
தமிழ்நாட்டில் கோடை மழை 55% குறைவாக பெய்துள்ளது - வானிலை மையம்
CM MK Stalin: அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
Veera Dheera Sooran:வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!
Veera Dheera Sooran:வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Premalatha Vijayakanth : ’’கேப்டன் உயிரோடு இருந்தால்..’’பத்ம விருதுடன் பிரேமலதா..உருக்கமான பேட்டிRahul Gandhi attacks BJP : BJP-க்கு புது விளக்கம்!  ராகுல் காந்தி நெத்தியடி! பரபரக்கும் ஆந்திராSelvaperunthagai on Annamalai : ”கச்சத்தீவு விவகாரம்.. வாய் திறங்க அ.மலை?” செல்வப்பெருந்தகை ஆவேசம்Ma Subramanian on NEET : நீட் தேர்வு குளறுபடி!மாசு புது விளக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Neeya Naana: மோசமான சூழலுக்குள் செல்கிறார்களா இளைஞர்கள்? - விவாதத்தை கிளப்பிய நீயா, நானா நிகழ்ச்சி
மோசமான சூழலுக்குள் செல்கிறார்களா இளைஞர்கள்? - விவாதத்தை கிளப்பிய நீயா, நானா நிகழ்ச்சி
Breaking News LIVE: தமிழ்நாட்டில் கோடை மழை 55% குறைவாக பெய்துள்ளது - வானிலை மையம்
தமிழ்நாட்டில் கோடை மழை 55% குறைவாக பெய்துள்ளது - வானிலை மையம்
CM MK Stalin: அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
Veera Dheera Sooran:வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!
Veera Dheera Sooran:வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!
Election Movie: பா.ரஞ்சித் மட்டும் இல்லைன்னா அவ்வளவுதான்.. பட விழாவில் நெகிழ்ந்து பேசிய இயக்குநர் தமிழ்!
பா.ரஞ்சித் மட்டும் இல்லைன்னா அவ்வளவுதான்.. பட விழாவில் நெகிழ்ந்து பேசிய இயக்குநர் தமிழ்!
UGC : யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்போது வரை? விண்ணப்பிப்பது எப்படி?
யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்போது வரை? விண்ணப்பிப்பது எப்படி?
TVK Vijay: அம்மாவை எந்நாளும் போற்றி வணங்குவோம்.. அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த விஜய்!
அம்மாவை எந்நாளும் போற்றி வணங்குவோம்.. அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த விஜய்!
BCCI On New Toss Rule: இனி கிரிக்கெட்டில் டாஸ் போடும் முறை இல்லை.. புதிய விதியை கொண்டு வரும் பிசிசிஐ.. ஏன் தெரியுமா?
இனி கிரிக்கெட்டில் டாஸ் போடும் முறை இல்லை.. புதிய விதியை கொண்டு வரும் பிசிசிஐ.. ஏன் தெரியுமா?
Embed widget