மேலும் அறிய

Karthigai Deepam 2022: அண்ணாமலையார் கோவிலின் காவல் தெய்வம் சிம்ம வாகனத்தில் உற்சவம் - பக்தர்கள் பரவசம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் காவல் தெய்வம் சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி மாடவீதியுலா பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 27-ஆம் தேதி அதிகாலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது. அன்று காலை மற்றும் இரவு விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, உண்ணாமுலை அம்மனுடன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வர் ஆகிய பஞ்சமூர்த்திகளுடன் மாடவீதியுளா நடைப்பெற்ற உள்ளது.

இந்நிகழ்வு 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த தீபத் திருவிழாவின் முக்கிய விழாவாக வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி வெள்ளி ரதமும், டிசம்பர் மூன்றாம் தேதி மகாரத தேரோட்டமும் அதனை தொடர்ந்து டிசம்பர் 6-ஆம் தேதி அன்று அதிகாலை 4-மணியளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.


Karthigai Deepam 2022: அண்ணாமலையார் கோவிலின் காவல் தெய்வம் சிம்ம வாகனத்தில் உற்சவம் - பக்தர்கள் பரவசம்..

 

இந்த மகா தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலம்,வெளிநாடுகளில் இருந்து 45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவார்கள் என்றும் அதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்து வருகிறது.

தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான அண்ணாமலையார் கோவிலின் காவல் தெய்வமான 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்போது அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிடாரி அம்மனுக்கு சிறப்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சாமி புறப்பாடு நடைபெற்றது.

 


Karthigai Deepam 2022: அண்ணாமலையார் கோவிலின் காவல் தெய்வம் சிம்ம வாகனத்தில் உற்சவம் - பக்தர்கள் பரவசம்..

இதில் ஏராளமான பக்தர்களுக்கு அருள் பாலித்த பிடாரி அம்மன் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் மட்டுமே சாமி வீதியுலா நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாட வீதியில் பிடாரி அம்மன் வீதி உலா வந்ததால் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்தோடு மாட வீதி முழுவதும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பிடாரி அம்மன் வீதியுலாவில் உற்சவ நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இன்று (சனிக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget