மேலும் அறிய

இரவு முழுவதும் பெய்த கன மழையால் தண்ணீரில் தத்தளித்த  திருப்பத்தூர் மாவட்டம்...!

பாதிக்கப்பட்ட  பகுதிகளை இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்

திருப்பத்தூர் மட்டத்திற்குட்பட்ட பல்வேறு  பகுதியில் நேற்று கனமழை பெய்தது அதன் காரணமாக ஜோலார்பேட்டை ரயில்  நிலையத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில்  மழைநீரும் சாக்கடை நீரும் கலந்து குளம் போல் காட்சி அளித்தது, மேலும் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி மற்றும் பாலாறு நதியில்  நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழையால்  சேதமடைந்த வீடுகள் மற்றும் பயிர்கள் குறித்து , கணக்கீடும் பணி மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


இரவு முழுவதும் பெய்த கன மழையால் தண்ணீரில் தத்தளித்த  திருப்பத்தூர் மாவட்டம்...!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பகலில் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் புழுக்கத்தில் தவித்து வந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய பெய்த பலத்த மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 4 நடைமேடைகளிலும் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியது. சுமார் 3 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதனால் இன்று அதிகாலை 5 மணிக்குச் செல்லும் சென்னை செல்லும் ஏலகிரி விரைவுவண்டி ரயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் உடனடியாக துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து மழைநீரை வெளியேற்றினர் .


இரவு முழுவதும் பெய்த கன மழையால் தண்ணீரில் தத்தளித்த  திருப்பத்தூர் மாவட்டம்...!

மழைநீர் வடிந்த பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காலதாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. அதேபோல் ஜோலார்பேட்டை புதுஓட்டல்தெரு, சின்னகம்மியம்பட்டு, பெரிய கம்மியம்பட்டு, ஏலகிரி, பொன்னேரி, மண்டலவாடி, குண்ணத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 

ஜோலார்பேட்டையில் ஆங்காங்கே கால்வாய்கள் அடைபட்டு இருப்பதால் நேற்று இரவு பெய்த ஒரு நாள் மழைக்கே தண்ணீரில்  மிதக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் உள்ள கால்வாய்கள் அங்கங்கே அடைபட்டு இருப்பதால் மொத்த கழிவுநீரும் ஜோலார்பேட்டை ரயில் சந்திப்பு பகுதி வழியாக வெளியேறி அங்குள்ள ஓட்டல் தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.

ஏலகிரி மலையில் மண்சரிவு காரணமாகச் சரிந்து விழுந்த பாறைகள்! மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

இரவு முழுவதும் பெய்த கன மழையால் தண்ணீரில் தத்தளித்த  திருப்பத்தூர் மாவட்டம்...!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் இரவு பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு பெரிய பெரிய பாறைகள் மரங்கள் சாலையில் விழுந்து மூன்று மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த காவல்துறை, வனத் துறை, நெடுஞ்சாலைத் துறை, துறை சார்ந்த அதிகாரிகள் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் சரிந்து விழுந்த பாறைகள் மற்றும் மரக்கிளைகளை சரி செய்தனர். 

இரவு முழுவதும் பெய்த கன மழையால் தண்ணீரில் தத்தளித்த  திருப்பத்தூர் மாவட்டம்...!

ஏலகிரி மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள 3 வது மற்றும் 9வது கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. மரங்களும் முறிந்தன. இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget