மேலும் அறிய

ஜெயங்கொண்டம் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி இல்லை - பயணிகள் கடும் அவதி

ஜெயங்கொண்டம் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை இல்லாததால் பயணிகள் கடும் அவதி, மேலும் திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலைய கட்டிடம் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இங்கு கழிவறை வசதி இல்லை. இதனால் முதியவர்கள், பள்ளி மாணவர்கள், பயணிகள் உள்ளிட்ட பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கோரிக்கை விடுத்தும், அங்கு கழிவறை அமைக்க நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு. இதனால் பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே சிலர் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் மூக்கை பொத்தியவாரே செல்லும் சூழல் உள்ளது. மேலும் பேருந்திற்காக  காத்திருப்பவர்கள் துர்நாற்றம் பொறுக்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவறை அமைக்க வேண்டும். மேலும் நகராட்சி நிர்வாகம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் உள்ள இடியும் நிலையில் உள்ள பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் 2 சக்கர வாகன காப்பகமும், நவீன இலவச கழிப்பிட வசதியும் அமைத்து தரக்கோரி பயணிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஜெயங்கொண்டம் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி இல்லை - பயணிகள் கடும் அவதி

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஜெயங்கொண்டம் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு இதுநாள் வரை இலவச நவீன கழிப்பறை இல்லாமல் பொதுமக்கள், மாணவிகள், முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இலவச நவீன கழிப்பறையை கட்டித் தர வேண்டும் எனவும், இதேபோல் இரு சக்கர வாகனம் காப்பகம் இல்லாமல் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு 2 சக்கர வாகன காப்பகத்தை பேருந்து நிலையத்தில் அமைத்து தர வேண்டும். இதேபோல் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்களில் கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நான்கு ரோடு பகுதியில் நவீன கழிப்பறையை கட்டித் தர வேண்டும் என்றனர்.


ஜெயங்கொண்டம் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி இல்லை - பயணிகள் கடும் அவதி

இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஜெயங்கொண்டம் பேருந்து  நிலைய பழைய கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் இதுபோன்ற கட்டிடம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். பேருந்து நிலைய பகுதிகளில் பயணிகள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் பயன்பெறும் வகையில் இலவச நவீன கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர். மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலனில் அக்கறைக்கொண்டு நடவடிக்கை எடுக்குமா என மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். மேலும் தொற்று நோய் பரவலில் இருந்து குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகளை காப்பாற்ற நகராட்சி நிர்வாகம நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Embed widget