மேலும் அறிய

ஜெயங்கொண்டம் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி இல்லை - பயணிகள் கடும் அவதி

ஜெயங்கொண்டம் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை இல்லாததால் பயணிகள் கடும் அவதி, மேலும் திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலைய கட்டிடம் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இங்கு கழிவறை வசதி இல்லை. இதனால் முதியவர்கள், பள்ளி மாணவர்கள், பயணிகள் உள்ளிட்ட பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கோரிக்கை விடுத்தும், அங்கு கழிவறை அமைக்க நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு. இதனால் பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே சிலர் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் மூக்கை பொத்தியவாரே செல்லும் சூழல் உள்ளது. மேலும் பேருந்திற்காக  காத்திருப்பவர்கள் துர்நாற்றம் பொறுக்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவறை அமைக்க வேண்டும். மேலும் நகராட்சி நிர்வாகம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் உள்ள இடியும் நிலையில் உள்ள பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் 2 சக்கர வாகன காப்பகமும், நவீன இலவச கழிப்பிட வசதியும் அமைத்து தரக்கோரி பயணிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஜெயங்கொண்டம் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி இல்லை - பயணிகள் கடும் அவதி

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஜெயங்கொண்டம் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு இதுநாள் வரை இலவச நவீன கழிப்பறை இல்லாமல் பொதுமக்கள், மாணவிகள், முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இலவச நவீன கழிப்பறையை கட்டித் தர வேண்டும் எனவும், இதேபோல் இரு சக்கர வாகனம் காப்பகம் இல்லாமல் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு 2 சக்கர வாகன காப்பகத்தை பேருந்து நிலையத்தில் அமைத்து தர வேண்டும். இதேபோல் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்களில் கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நான்கு ரோடு பகுதியில் நவீன கழிப்பறையை கட்டித் தர வேண்டும் என்றனர்.


ஜெயங்கொண்டம் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி இல்லை - பயணிகள் கடும் அவதி

இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஜெயங்கொண்டம் பேருந்து  நிலைய பழைய கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் இதுபோன்ற கட்டிடம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். பேருந்து நிலைய பகுதிகளில் பயணிகள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் பயன்பெறும் வகையில் இலவச நவீன கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர். மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலனில் அக்கறைக்கொண்டு நடவடிக்கை எடுக்குமா என மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். மேலும் தொற்று நோய் பரவலில் இருந்து குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகளை காப்பாற்ற நகராட்சி நிர்வாகம நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget