மேலும் அறிய

“I AM WAITING” திருச்சி எஸ்.பி. வருண்குமார் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் – என்ன சம்பவம்..?

சிறப்பாகவும் துணிச்சலாகவும் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு வழங்கபப்டும் முதல்வரின் “அண்ணா விருதை” வருண்குமாருக்கு அறிவித்து அவரது பணியை கவுரவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

சிறப்பாக பணியாற்றியதற்காக முதல்வரின் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் தனது வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் ஆக “I AM WATING”  என பதிவு செய்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.“I AM WAITING”  திருச்சி எஸ்.பி. வருண்குமார் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் – என்ன சம்பவம்..?

அதிரடிக்கு பெயர் போன வருண்

திருச்சி எஸ்.பியாக வருண்குமார் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பமாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் வருண்குமாருக்கும் – நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் தமிழ்நாடு முழுவதும் கவனம் பெற்ற ஒரு போலீஸ் அதிகாரியாக மாறினார். பொதுவாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட மற்ற போலீஸ் அதிகாரிகள் தயங்கும் நிலையில், அதனை உடைத்து பொதுமக்களின் குறைகளுக்கு பதிலளித்து அதை நிவர்த்தி செய்வது முதல் மிரட்டுபவர்களுக்கு பதிலடி கொடுத்து அவர்களை பின்னங்கால் பிடரியில் பட ஓட வைப்பது வரை எதற்கும் அஞ்சாமல் துணிச்சலாக மனதில் பட்டதை பதிவிட்டு வந்தார் வருண்குமார்.

சாட்டை துரைமுருகன் முதல் சவுக்கு சங்கர் வரை

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது, பிரபல யூடுபர் சவுக்கு சங்கர் கைது, திருச்சியை ஆட்டிப்படைத்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டர் என தன்னுடைய துணிச்சலான நடவடிக்கைகளால் ‘இதுதாண்டா போலீஸ்” என பலரையும் வியப்பில் ஆழ்த்தினார் வருண்குமார்.

அண்ணா பதக்கம் அறிவிப்பு

இந்நிலையில், சிறப்பாகவும் துணிச்சலாகவும் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு வழங்கபப்டும் முதல்வரின் “அண்ணா விருதை” வருண்குமாருக்கு அறிவித்து அவரது பணியை கவுரவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

நேரடியாக பொதுமக்கள் எஸ்.பியிடமே புகார் சொல்லலாம்

இப்படியான சூழலில் அவர் திருச்சி எஸ்.பியாக பதவியேற்ற நாளிலேயே பொதுமக்கள் நேரடியாக எஸ்.பியிடம் புகார் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிவித்திருந்தார். அதற்கு பாராட்டும் புகார்களும் குவிய, அவரே நேரடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்தார். திருச்சி காட்டுப் பகுதிகளில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்படும் தகவல் கிடைத்ததும் இரவு என்று கூட பாராமல் நேரடியாக அவரே அங்கு சென்று ஊறல்களை அழித்து குற்றவாளிகளை கைது செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் நடந்து வந்த மணல் கடத்தலை கட்டுப்படுத்தியும் ஒரு நம்பர் லாட்டரிக்கு எதிராக அவர் எடுத்த கடும் நடவடிக்கைகளாலும் திருச்சி மக்கள் மத்தியில் காவல்துறையினருக்கு நல்ல பெயரும் காவல்துறை மீது பயமற்ற நம்பிக்கையும் பிறந்திருக்கிறது.

ஐ எம் வெயிட்டிங் – என்ன சார் செய்யப்போறீங்க?

இந்நிலையில், பொதுமக்கள் தயக்கமின்றி தன்னை தொடர்புகொண்டு குற்றச் செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று மீண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் வருண்குமார் ஐ.பி.எஸ்

அரிசி திருடுவது, நில அபகரிப்பு, போலி பத்திரம் தயாரித்தல், ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம், ஹவாலா, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, கூலிப்படை மூலம் மிரட்டல், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, திரள்நிதி என்ற பெயரில் மிரட்டி பணம் பறிப்பது என எந்த குற்றமாக இருந்தாலும் மக்கள் தைரியமாக தன்னை தொடர்புகொண்டு புகார் கொடுக்கலாம் என்றும் புகார் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளதோடு, அதற்கான தொடர்பு எண்ணாக 9487464651 என்ற எண்ணையும் அவர் பகிர்ந்துள்ளார்.

குற்றவாளிகள் மீது புகார் கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் என்பதை குறிப்பிடும் விதமாக “I am waiting” என தனது வாட்ஸ்-அபில் ஸ்டேடஸ்ம் வைத்திருக்கிறார் வருண்குமார்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget