மேலும் அறிய

வைகுண்ட ஏகாதசி திருவிழா; திருச்சி மாவட்டத்திற்கு டிச.23 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா மற்றும் சொர்க்கவாசல் திறப்பு டிச.23 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகப் போற்றப்படும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், 7 சுற்று மதில்களுடன் இக்கோயில் அமைந்துள்ளது. திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ரங்கநாதரை, நெடுங்காலமாக பிரம்மதேவர் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜைகள் செய்ய, சூரியன் நியமிக்கப்பட்டார். சூரிய குலத்தில் தோன்றிய ராமபிரானும், அயோத்தியில் இருந்த ரங்கநாதரை வழிபட்டு வந்தார். ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கு வருகை புரிந்த விபீஷணனுக்கு, ராமபிரான், தான் பூஜித்து வந்த ரங்கநாதர் சிலையை பரிசாக அளித்தார். விபீஷணன், இலங்கை திரும்பும் வழியில், சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணினார். ரங்கநாதர் சிலையை கீழே வைக்க விரும்பாத விபீஷணன், காவிரி ஆற்றங்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக் கூடாது என்று கூறிவிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்தார். ஆனால் அச்சிறுவன், ரங்கநாதர் சிலையைக் கீழே வைத்துவிட்டான். சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வந்த விபீஷணன், சிறுவனைக் கடிந்து கொண்டார். தரையில் இருந்து மீண்டும் ரங்கநாதர் சிலையை எடுக்க இயலவில்லை.

இதனால் கலங்கிய மனநிலையில் இருந்த விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர் தர்மவர்மன் ஆறுதல் கூறினார். ரங்கநாதருக்கு காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டு அருள்வதாக உறுதியளித்தார். சிறுவனாக வந்தது விநாயகப் பெருமான் என்று கூறப்படுகிறது. அவரே மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். ரங்கநாதரின் விருப்பத்துக்கு ஏற்ப தர்மவர்மனும், இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டார். காலப்போக்கில் இக்கோயில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போனதாக கூறப்படுகிறது. மன்னர் தர்மசோழர் மரபில் வந்த கிள்ளிவளவன், இக்கோயிலை மீண்டும் அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. 


வைகுண்ட ஏகாதசி திருவிழா; திருச்சி மாவட்டத்திற்கு டிச.23 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு

மேலும், ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு வெகு விமர்சையாக நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது, பன்னிரண்டாம் தேதி பகல்பத்து விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பகல் 10 விழாவின் பத்தாம் திருநாளான மோகினி அலங்காரம் 22 ஆம் தேதியும் நடைபெறும். இராபத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 23ம் தேதி அதிகாலை 4மணிக்கு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் இனிதே நிறைவடையும். ஆகையால் வரும் 23ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். மேலும்  இதன் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் திறப்பு வரும் 23ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.


வைகுண்ட ஏகாதசி திருவிழா; திருச்சி மாவட்டத்திற்கு டிச.23 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு

குறிப்பாக மாநகராட்சி சார்பில், ஸ்ரீரங்கம் பேருந்துகள் நிற்குமிடத்தில் பொதுமக்கள் பேருந்துகளில் வசதியாக ஏறவும், இறங்கவும் தடுப்புகள் அமைக்க வேண்டும். திருக்கோயில் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ஸ்ரீரங்கம் நகரம் முழுவதும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதுடன், அந்த நாட்களில் 24 மணிநேரமும் குடிநீர் வழங்க வேண்டும். ஆங்காங்கே தற்காலிக குடிநீர்த் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். விழா நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கவும், மின்பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்ய தேவையான பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருத்தல் ஆகியவற்றில் மின்வாரியத்தினர் உரிய கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சி பள்ளிகள் ஒதுக்கீடு செய்து தரப்படும்.

இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் மற்றும் 24 மணி நேர மருத்துவ முகாம்களும் நடைபெறும். அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்கள் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் உடன் தயாா் நிலையில் இருத்தல் வேண்டும். பக்தா்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அலுவலா்கள் செய்து தர வேண்டும். அந்தந்த துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகங்கை: Grinder App வலையில் சிக்கி இளைஞர் மீது கொடூர தாக்குதல்! கொள்ளையர்கள் கைது, அதிர்ச்சி தகவல்!
சிவகங்கை: Grinder App வலையில் சிக்கி இளைஞர் மீது கொடூர தாக்குதல்! கொள்ளையர்கள் கைது, அதிர்ச்சி தகவல்!
DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
Annamalai: ஜோசியமா? பழைய கர்மாவா? - அண்ணாமலையை சுத்துபோடும் பாஜக தலைகள் - மோடிக்கே கல்தா ஏன்?
Annamalai: ஜோசியமா? பழைய கர்மாவா? - அண்ணாமலையை சுத்துபோடும் பாஜக தலைகள் - மோடிக்கே கல்தா ஏன்?
Trump on Iran War: “என் இலக்கு இதுதான்” - போர் குறித்து உண்மையை உடைத்த ட்ரம்ப்; பரபரப்பு விளக்கம்
“என் இலக்கு இதுதான்” - போர் குறித்து உண்மையை உடைத்த ட்ரம்ப்; பரபரப்பு விளக்கம்
PMK Candidate List: பட்டியலில் சௌமியா, திலகபாமா - பாமக வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி - யார்? எங்கு? போட்டி
PMK Candidate List: பட்டியலில் சௌமியா, திலகபாமா - பாமக வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி - யார்? எங்கு? போட்டி
GOLD SILVER RATE MAR. 30: அப்பாடா, எங்க கூடிடுமோன்னு பயமா இருந்துச்சு.! இன்று கணிசமாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு.?
அப்பாடா, எங்க கூடிடுமோன்னு பயமா இருந்துச்சு.! இன்று கணிசமாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு.?
Toyota Innova Hycross Facelift: பெரிய வண்டி பெரிய மைலேஜ்; புதுப்பொலிவுடன் வரும் இன்னோவா ஹைக்ராஸ்; என்னென்ன மாற்றங்கள்.?
பெரிய வண்டி பெரிய மைலேஜ்; புதுப்பொலிவுடன் வரும் இன்னோவா ஹைக்ராஸ்; என்னென்ன மாற்றங்கள்.?
Top 10 News Headlines: பாமக வேட்பாளர் பட்டியல், தங்கம் விலை குறைவு, பெற்றோரை புறக்கணித்தால் சம்பளம் கட், மொஜ்தபா அறிக்கை - 11 மணி செய்திகள்
பாமக வேட்பாளர் பட்டியல், தங்கம் விலை குறைவு, பெற்றோரை புறக்கணித்தால் சம்பளம் கட், மொஜ்தபா அறிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget