மேலும் அறிய

அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எதிராக வைக்கப்பட்ட பேனர்- திருச்சி மாவட்ட திமுகவில் வெடித்த பிரளயம்

திமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் - அமைச்சர்  மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக அமைச்சர் நேரு ஆதரவாளர் பேனர் வைத்து போர்க்கொடி.

திருச்சி மாவட்டம் என்றாலே திமுகவிற்கு ஒரு திருப்புமுனை என்று கூறலாம். அதை நிரூபிக்கும் வகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக திமுக கைப்பற்றியது. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக திருச்சியில் திமுக கட்சியில் உட்கட்சி பூசல் நடைபெற்று வருவதாக தகவல் பரவி வந்தது. குறிப்பாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் ஒரு புறம், அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளர்கள் ஒருபுறம் என திருச்சி தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். குறிப்பாக திருச்சியில் திமுகவில் பதவி வழங்குவதில் பல்வேறு உட்கட்சி பூசல் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில்  திமுகவில் மத்திய மாவட்ட செயலாளராக வைரமணி, இவர்  அமைச்சர் நேருவின் ஆதரவாளர் ஆவர். மேலும் வடக்கு மாவட்ட செயலாளராக முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இருந்து வருகின்றனர்.

திமுக தெற்கு மாவட்ட செயலாளரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது அவரது மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வரும் நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட, திமுக துணைச் செயலாளராக பதவி வகித்து வந்த அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளரான குடமுருட்டி சேகரின் பதவியை பறித்துவிட்டு தன்னுடைய ஆதரவாளருக்கு பதவி வழங்கியுள்ளதாக  அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. 


அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு  எதிராக வைக்கப்பட்ட பேனர்- திருச்சி மாவட்ட திமுகவில் வெடித்த பிரளயம்

குறிப்பாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களை பதவியில் இருந்து நீக்கி, தனது ஆதரவாளர்களை நியமனம் செய்யும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இந்த செயலுக்கு கட்சியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் தான் "உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால் தான் பலன் உண்டு, கிடைத்தவனை கொண்டு நடத்தினால் பலனில்லை" என்ற அறிஞர் அண்ணாவின் வாசகத்துடன் குடமுருட்டி சேகர் திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மறைமுகமாக கண்டித்து பேனர் வைத்து திமுகவில் போர்க்கொடியை உயர்த்தி உள்ளார். இந்த பேனர் விவகாரம் தற்போது திமுக தலைமை வரைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதால், மாற்றம் பிறக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் திமுகவில் உள்ள தொண்டர்கள் 

இது மட்டும் இன்றி முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ அமைச்சர், திமுக இளைஞரணி மாநில செயலாளர், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் என மூன்று பதவிகளை வகித்து வருவதால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியையும் பறிக்க வேண்டும் எனவும் தலைமைக்கு திருச்சி மாவட்ட திமுகவில் இருந்து மனுக்களும் அனுப்பப்பட்டுள்ளதால் திருச்சி மாவட்ட திமுகவில் தற்போது பிரளயம் வெடித்துள்ளது என்றே கூறலாம்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget