மேலும் அறிய

Trichy: திருவெறும்பூரில் மாடு முட்டி சிறுவன் காயம் - பொதுமக்கள் சாலை மறியல்

திருவெறும்பூர் அருகே மாடு முட்டி சிறுவன் படுகாயம் அடைந்தார். வீதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் ஆலை பகுதியில் மாடுகள், நாய்கள் தொல்லை அதிக அளவில் இருந்து வருகிறது. எனவே இவைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கும் படி பாய்லர் ஆலை அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினர் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாக்குடி ஊராட்சி பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). பாய்லர் ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறது. இவரது மகன் ஜெஸ்வந்த் (4). இவன் பாய்லர் ஆலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். நேற்று ஜெஸ்வந்த் பாய்லர் ஆலை குடியிருப்பு காமராஜபுரத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அங்கு நின்று இருந்த காளை மாடு ஜெஸ்வந்த்தை முட்டியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் மாட்டை விரட்டி, பலத்த காயம் அடைந்த சிறுவனை மீட்டு பாய்லர் ஆலை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவன் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.


Trichy: திருவெறும்பூரில் மாடு முட்டி சிறுவன் காயம் -  பொதுமக்கள் சாலை மறியல்

இதை அறிந்த தொழிற்சங்க அனைத்து நிர்வாகிகள் மற்றும் பாய்லர் ஆலை ஊழியர்கள் திரண்டு மாடு மற்றும் நாய்களை பிடிக்க கோரி பாய்லர் ஆலை நிர்வாகம் மற்றும் துவாக்குடி நகராட்சி கூத்தைப்பர் பேரூராட்சி நிர்வாகங்களை கண்டித்து திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், துவாக்குடி நகராட்சி தலைவர் காயாம்பு, கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், கூத்தைப்பார் செயல்அலுவலர் சுரேஷ்குமார், திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், பாய்லர் ஆலை மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் பலர் பேச்சுவார்்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலை தொடர்ந்தனர்.


Trichy: திருவெறும்பூரில் மாடு முட்டி சிறுவன் காயம் -  பொதுமக்கள் சாலை மறியல்

இதனை தொடர்ந்து துவாக்குடி நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து இன்னும் 2 நாட்களுக்குள் பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள மாடுகள் மற்றும் நாய்களை முழுமையாக அப்புறப்படுத்துவோம் என்றும் உறுதி அளித்தனர். இது தொடர்பாக பாய்லர் ஆலை நிர்வாக மனித வள மேம்பாட்டு அதிகாரி மெல்வின் கூறும்போது, பாய்லர் ஆலை குடியிருப்பு வளாகம் மற்றும் ஆலைப் பகுதிகளில் உள்ள மாடுகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்படும். மேலும் ஆலைக்குள் மாடுகள் வராத அளவிற்கு அதற்கென தடுப்புகள் அமைக்கப்பட்டு பாய்லர் ஆலை ஊழியர்களின் குடும்பத்துக்கு முழுபாதுகாப்பு வழங்கப்படும் என்றார். மேலும் காயம் அடைந்த ஜெஸ்வந்த்துக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என பாய்லர் ஆலை தரப்பில் கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget