மேலும் அறிய

திருச்சியில் பரபரப்பு... பிறந்த சிலமணி நேரத்தில் குப்பையில் வீசப்பட்ட பெண் குழந்தை

திருச்சி அருகே பிறந்த சில மணிநேரமே ஆன பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் கல்லகம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கோழிக்கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு கிராமத்தின் கடைசி பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் கோழிக்கடைக்கு வேலைக்கு சென்று இருந்த சுந்தர்ராஜன் மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் கழிவறை அருகே உள்ள குப்பை மேட்டில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகே சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது. இதைகண்ட சுந்தர்ராஜன் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து பார்த்தும் அந்த குழந்தை பற்றி தகவல் தெரியாததால் கிராம நிர்வாக அதிகாரி மோகன்ராஜ் மற்றும் கல்லக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கல்லக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.


திருச்சியில் பரபரப்பு... பிறந்த சிலமணி நேரத்தில் குப்பையில் வீசப்பட்ட பெண் குழந்தை
 
இதனையடுத்து அந்த குழந்தை திருச்சியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த பெண் யார்?, கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை வீசி சென்றாரா? அல்லது கல்லகம் கிராமம் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் வெளியூரை சேர்ந்தவர்கள் குழந்தையை கடத்தி வரும்போது, போலீசிடம் சிக்கி விடுவோம் என்று பயந்து குழந்தையை வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சமீபத்தில் குழந்தை பெற்ற பெண் யாராவது சிகிச்சைக்கு வந்தார்களா?, மேலும் குழந்தை பெற்ற பெண்கள் விவரங்களை போலீசார் கேட்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த சில மணிநேரமே ஆன குழந்தையை பெண் ஒருவர் குப்பையில் வீசி சென்ற சம்பவம் கல்லகம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Embed widget