மேலும் அறிய

Trichy admk protest: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் - முன்னாள் எம்பி. ப.குமார்

தமிழ்நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து. போதைப்பொட்களை தடுப்பதில் திமுக அரசு சரியாக செயல்படவில்லை, மாறாக கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு உடந்தையாக காவல் துறையும் ,மதுவிலக்கு துறையும் செயல்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்தும், கள்ளச்சாராய மரணத்திற்கு உடனடியாக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னால் அமைச்சர்கள் பரஞ்சோதி, வளர்மதி, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன், மற்றும் அதிமுக மாவட்ட,  வட்ட, பகுதி, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துக்கொண்டனர். 


Trichy admk protest: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் - முன்னாள் எம்பி. ப.குமார்

மேலும், தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் கள்ளச்சாராயம் விவகாரத்தில் முழு பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் - முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விவகாரத்தில் இறப்பு எண்ணிக்கையை திமுக அரசு மறைத்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார். மக்களுக்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, ஆட்சி நடத்தி வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். 


Trichy admk protest: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் - முன்னாள் எம்பி. ப.குமார்

சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமியை பேச அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஏராளமானோர் உயிரிழந்ததை குறித்து விரிவாக பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த திமுக அரசு எப்படி செயல்பட்டு வருகிறது என்பது மக்களுக்குத் தெரியும். ஆகையால் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் போன்று இனி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது.  ஆகையால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும். விரைவில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்படும் எடப்பாடி.பழனிச்சாமி முதல்வர் ஆவார் என்பது உறுதியாகிவிட்டது என பேசினார்.


Trichy admk protest: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் - முன்னாள் எம்பி. ப.குமார்

கள்ளச்சாரயம் விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் 

இரும்பு கரம் கொண்டு கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனா தற்போது அந்த இரும்பு கரம் துருப்பிடித்து போனது. போதைப்பொருளை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சவுக்கு சங்கர், பஞ்சுமிட்டாய் விற்பனை செய்பவர், கிளி ஜோசியம் பார்ப்பவர் என அனைவரையும் சிறையில் அடைக்கிறார். ஆனால் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். 

மெத்தனால் பொருள் புதுச்சேரி, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாமல் எப்படி இது சாத்தியமாகும்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்திற்கு முதல் குற்றவாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது குற்றவாளியாக காவல்துறை, மூன்றாவது குற்றவாளி அந்த மாவட்டதில் இருக்கும் திமுக நிர்வாகிகள் இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்திற்கும் தானாக முன்வந்து பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். கள்ளக்குறிச்சியில் கலாச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் இறப்பு குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தலைப்பு செய்திகள்

"முதல்வர் விஜய் எங்கள் வயிற்றில் அடித்துள்ளார்" - பால் உற்பத்தியாளர்கள் கொந்தளிப்பு; ஆவின் பால் நிறுத்தம்?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Embed widget