மேலும் அறிய

திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை - ரூ.31 லட்சம் பறிமுதல்

திருச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.31 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக அரசு, மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு லஞ்சஒழிப்பு துறை காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களில் மூன்று அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி ஹீபர் ரோட்டில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப்பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கட்டளை மேட்டு வாய்க்கால் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாக திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தொலைபேசி மூலமாக  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் 2.30 மணியளவில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல்துறை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப்பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது, உதவி செயற்பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் மணிமோகன் ஆகியோரது அலுவலக அறையில் கணக்கில் வராத ரூ.31 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.


திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை -  ரூ.31 லட்சம் பறிமுதல்

மேலும் இதுபற்றி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அந்த பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லை. அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், அங்கிருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். மேலும் அங்கிருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து இரவு 7 மணி வரை நடந்தது. பின்னர் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து திருச்சி திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை பகுதியில் உள்ள கந்தசாமியின் வீட்டிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை ராஜா காலனி பகுதியில் உள்ள மணிமோகன் வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில் மணிமோகன் வீட்டில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசு அலுவலகங்களில் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது பொதுமக்கள்புகார் அளிக்கும்பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என லஞ்ச ஒழிப்பு துறை அதிகரிகாள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget