மேலும் அறிய

திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை - ரூ.31 லட்சம் பறிமுதல்

திருச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.31 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக அரசு, மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு லஞ்சஒழிப்பு துறை காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களில் மூன்று அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி ஹீபர் ரோட்டில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப்பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கட்டளை மேட்டு வாய்க்கால் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாக திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தொலைபேசி மூலமாக  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் 2.30 மணியளவில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல்துறை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப்பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது, உதவி செயற்பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் மணிமோகன் ஆகியோரது அலுவலக அறையில் கணக்கில் வராத ரூ.31 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.


திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை - ரூ.31 லட்சம் பறிமுதல்

மேலும் இதுபற்றி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அந்த பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லை. அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், அங்கிருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். மேலும் அங்கிருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து இரவு 7 மணி வரை நடந்தது. பின்னர் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து திருச்சி திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை பகுதியில் உள்ள கந்தசாமியின் வீட்டிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை ராஜா காலனி பகுதியில் உள்ள மணிமோகன் வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில் மணிமோகன் வீட்டில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசு அலுவலகங்களில் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது பொதுமக்கள்புகார் அளிக்கும்பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என லஞ்ச ஒழிப்பு துறை அதிகரிகாள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget