மேலும் அறிய

புதுக்கோட்டை: குடிநீர் தட்டுப்பாடு... காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு ஏற்படுவதும், அதனால் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் விரைவில் குடிநீர் தட்டுபாடுகளுக்கு நிரந்தர தீவுகாணப்படும் என தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுபாட்டுக்கு தீர்வு கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்ச்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா புத்தாம்பூர், செங்கானம் ஆகிய ஊராட்சிகளில் பேயாடிக்கோட்டை, செங்கானம், பறையத்தூர், இடையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அடம்பூர் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திருப்புனவாசல்-ஆவுடையார்கோவில் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 6 மாதத்திற்கு முன்பு போராட்டம் நடத்துவதாக வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கூறினர். ஆனால் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறினர்.


புதுக்கோட்டை: குடிநீர் தட்டுப்பாடு... காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

இதையடுத்து அங்கு வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் திருப்புனவாசல்-ஆவுடையார்கோவில் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுக்குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை நீண்ட காலமாகவே தொடர்கிறது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தவும், கடலோரப் பகுதிகளுக்கு உள்ளாட்சி நிர்வாகம் மூலமே லாரி தண்ணீர் விநியோகத்துக்கும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நிரந்தரத் தீர்வுக்கும் நடவடிக்கை தேவை என தெரிவித்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் கூறியது.. இந்த 20 கிராமங்களில் வாழும் பொதுமக்களுக்கு  கோடைக்காலங்களில் மட்டும் இல்லாமல் பல சமயங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுக்குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆகையால் தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஓவ்வொரு முறையும் மக்கள் போராட்டம் நடத்துவதும், அதிகாரிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. எப்போது பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்கும் என்பது கேள்வி குறியாக உள்ளது.  


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில்  இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில்  இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Embed widget