மேலும் அறிய

குடும்ப பிரச்னை காரணமாக மகனுடன் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை -பெரம்பலூரில் சோகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்னையால் மகனுடன் தந்தை கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் வெண்பாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூர் காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35). விவசாயி. இவரது மனைவி பூங்கொடி (30). இவர்களுக்கு யோகேஸ்வரன் (9), பிரகதீஸ்வரன் (4) என 2 மகன்கள் உண்டு. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாஸ்கர், தனது 2-வது மகன் பிரகதீஸ்வரனை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த விவசாயக் கிணற்றுக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவர், பிரகதீஸ்வரனுடன் கிணற்றில் குதித்துள்ளார். இதில் 2 பேரும் நீரில் மூழ்கினர். இதனைக்கண்ட பூங்கொடி, சத்தம்போட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள், கிணற்றுக்குள் இருந்து 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கி தேடினர். இதையடுத்து பாஸ்கர் மற்றும் பிரகதீஸ்வரன் ஆகியோரை பிணமாக மீட்டு கிணற்றில் இருந்து மேலே கொண்டு வந்தனர்.


குடும்ப பிரச்னை காரணமாக மகனுடன் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை -பெரம்பலூரில் சோகம்

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த கை.களத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினையால் மகனுடன் தந்தை கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் வெண்பாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டதில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், இவர்களுக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக தான் இருந்தனர். மேலும் பாஸ்கர் தினம்தோறும் விவசாய பணியில் ஈடுபட்டு வருவார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிந்தது.


குடும்ப பிரச்னை காரணமாக மகனுடன் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை -பெரம்பலூரில் சோகம்

இதனை தொடர்ந்து தினமும் இருவரும் சண்டையிட்டு கொள்வார்கள். காலபோக்கில் பிரச்சனை அதிகரித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து இருவருக்கும் பிரச்னை நடந்தாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரனையை மேற்கொண்டு வருகிறார்கள். 


தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 

கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சியில் நாளை (23-7-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சியில் நாளை (23-7-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: நாளை (22-07-2026) திருச்சியில் மின்தடை! காலை முதல் மாலை வரை எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது?
நாளை (22-07-2026) திருச்சியில் மின்தடை! காலை முதல் மாலை வரை எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது?
Trichy power cut (18-07-2026): நாளை திருச்சியில் மின்தடை! உங்க ஏரியாவில் கரண்ட் இருக்குமா? உடனே செக் பண்ணுங்க
நாளை திருச்சியில் மின்தடை! உங்க ஏரியாவில் கரண்ட் இருக்குமா? உடனே செக் பண்ணுங்க
Trichy power cut: திருச்சியில் மின்தடை அறிவிப்பு: நாளை (14-07-2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
திருச்சியில் மின்தடை அறிவிப்பு: நாளை (14-07-2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
Best Sunroof Cars under 10 Lakh: பட்ஜெட் ரொம்ப கம்மியா சன்ரூஃப் கார் வேணுமா.? ரூ.10 லட்சத்துக்குள்ள கிடைக்குற கார்கள் லிஸ்ட் இதோ..
பட்ஜெட் ரொம்ப கம்மியா சன்ரூஃப் கார் வேணுமா.? ரூ.10 லட்சத்துக்குள்ள கிடைக்குற கார்கள் லிஸ்ட் இதோ..
ராகுல் காந்தி நேற்று கைது... இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
ராகுல் காந்தி நேற்று கைது.. இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
Embed widget