மேலும் அறிய

திருமாவளவன் பற்றி அவதூறு பதிவு; நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு பதிவு

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு, பதிவை பதிவிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு .

கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் முக்கிய நபர்கள், அரசியல் பிரமுகர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள் என சிலரை பற்றி, சில அமைப்பை சேர்ந்தவர்கள் மிகவும் ஆபாசமாக அவதூறுகளை பரப்பும் வகையில் பதிவிட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. 

அண்மையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி ஆபாசமாகவும், மோசமாகவும், தவறான தகவல்களை  எக்ஸ் தளத்தில் சிலர் பதிவிட்டு இருந்தனர்.

இதுகுறித்து எஸ்பி. வருண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தவறான பதிவுகளை பதிவிட்ட X -ஐ கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகளை கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், வி.சி.க-வை சேர்ந்த ஸ்நேகா என்ற பெண்ணையும். மற்றுமொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் விதமாகவும், மற்றும் திருமாவளவன் ஒரு பெண் நிற்பது போன்ற புகைப்படத்தை, ஆபாசமாகவும் அருவருக்கதக்க வகையில் X தளத்தில் பதிவிட்டுள்ளனர். 

மேலும், இந்தகைய பதிவுகளை பதிவிடுவதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் மற்றவர்களுக்கும் பகைமையை ஏற்படுத்தி, கலவரத்தை தூண்டி, பொது அமைதியை, குலைக்கும் விதமாக பதிவிட்டுள்ளனர். ஆகையால் அவதூறு பரப்பிய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழாதன் (எ) கமலதுரை என்பவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகார் கொடுத்தார். 

இதனை தொடர்ந்து விசாரணை மேக்கொண்ட போலீஸ் கூறிய தகவல்...  புகாரின் அடிப்படையில் X Page-ஐ பற்றி விசாரித்த போது, சென்னை அண்ணாநகர் வசந்தம் காலனியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சார்ந்த செல்வகாந்தன், அவரது மனைவி சாந்திப்ரியா என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் கனடாவில் இருந்து கொண்டு செல்வகாந்தன் மற்றும் மனைவி சாந்திபிரியா செய்து வருகிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது. 


திருமாவளவன் பற்றி அவதூறு பதிவு; நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு பதிவு

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதிவு 

மேலும், இவர்கள் இருவரும்  X Page-ல் பல அரசியல் கட்சி தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்துகளை பதிவிட்டது தெரிந்தது. 

குறிப்பாக சாந்திபிரியா இலங்கை நாட்டை சேர்ந்தவர் என்றும், இலங்கையை சேர்ந்த அவருக்கு போலியாக இந்தியன் Passport தயார் செய்து கொடுத்து, அவரை கனடா நாட்டிற்கு சட்டத்திற்கு புறம்பாக செல்வகாந்தன் அனுப்பியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. 

குறிப்பக  இருவரும் விசிக தலைவர் தொல் திருமாவளவன், பட்டியிலினத்தவர் என்று தெரிந்தும் உள் நோக்கத்துடன், அவரையும், விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டுள்ளனர்.

விசிக கட்சிக்கும் மற்ற அமைப்புகளுக்கும் பகைமை உணர்வை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

ஆகையால் ஆபாச பதிவுகளை பதிவு செய்த செல்வகாந்தன், அவரது மனைவி சாந்திபிரியா மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனர். 

அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் செல்வகாந்தன் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget