மேலும் அறிய

Lok Sabha Election 2024 : தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழில் செய்திட வேண்டும் - திருச்சி தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

Lok Sabha Election 2024: அச்சகங்கள், நகை அடகு பிடிப்போர் மற்றும் திருமணம், தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழில் போன்றவற்றை செய்திட வேண்டும்.

Lok Sabha Election 2024: பாராளுமன்றத் தேர்தல் 2024, 16.03.2024 அன்று பிற்பகல் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அனைவரும் கட்டாயமாக விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், நகை மற்றும் வட்டி தொழில் செய்பவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.


Lok Sabha Election 2024 : தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழில் செய்திட வேண்டும் - திருச்சி தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

திருமண மண்டபங்கள் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டியவை:

தனியார் நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நபர்களுக்கு மொய் என்ற பெயரில் பணமோ, பரிசு பொருட்களோ போன் போன்றவை இலவசமாக விநியோக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான இனங்கள் கண்காணிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். திருமண மண்டபங்களில் நாளது தேதியலிருந்து தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட்ட வட்டாசியரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். வாக்குபதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது. மேற்கண்ட நிபந்தனைகளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்புள்ளது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ஒரே நாளில் மொத்தமாக சாப்பாடு, பிரியாணி போன்ற உணவுகளை அதிகமாக சமைத்து தேர்தல் நேரத்தில் விநியோகிக்க கூடாது. தேர்தல் விதிமுறைகளை திருமண மண்டப உரிமையாளர்கள் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 


Lok Sabha Election 2024 : தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழில் செய்திட வேண்டும் - திருச்சி தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டியவை:

தங்கும் விடுதிகளில் நாளது தேதியிலிருந்து தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட் வட்டாசியரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். வாக்குபதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களையோ பதுக்கும் விதத்தில் செயல்படுவோரை கண்டறிந்து உடனடியாக தகவல் தெரிவித்திடல் வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


Lok Sabha Election 2024 : தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழில் செய்திட வேண்டும் - திருச்சி தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

வட்டிக்கு விடுவோர் மற்றும் நகை அடகு பிடிப்போர் கடைபிடிக்க வேண்டியவை:

எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் நகை அல்லது பத்திரத்தின் பேரில் கணிசமான ரொக்க தொகையினை வழங்கிடுவதற்கு முன்னர் அவர் அரசியல் அல்லது வேட்பாளர் தொடர்புடையவரா 61601 அறிவித்து கொள்ள வேண்டும். வாக்காளர்களை கவரும் விதத்தில் டோக்கன் விநியோகத்தின் மீது பணமோ அல்லது பொருளோ கொடுத்திடக் கூடாது. வாக்காளர்களை கவரும் விதத்தில் ஏற்கனவே அடகு வைக்கப்பட்ட நகைகளை இலவசமாக திருப்பி தருவதோ அல்லது சிறிய நகைகளுக்கு அதிக அளவு பணம் தருவதோ கூடாது. தோர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படை தன்மையுனும் உரிய விதிமுறைகளின் படியும் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இனங்களும் அதற்குரிய பதிவேட்டில் சரியாக பராமரிக்ககப்பட்டு இருக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால். அச்சகங்கள், நகை அடகு பிடிப்போர் மற்றும் திருமணம், தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரம், தொழில் போன்றவற்றை செய்திட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Embed widget