மேலும் அறிய

திருச்சியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு! 18 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை மிக கனமழை எனத் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் நோய் அதிகரித்து வருவதாகவும் அவற்றை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை  குறிப்பாக பல இடங்களில் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் கோவை மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஃப்ளூ காய்ச்சல் பரவல் என்பது பரவலாக உள்ளது. இந்நிலையில் தான் கோவை மக்களுக்கு அந்த மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியது..  கோவை மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக்கூடும் காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர்வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காணப்படுகிறது. பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்களில் குணமடைந்து விடுவர். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.


திருச்சியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு! 18 பேர் மருத்துவமனையில் அனுமதி

மேலும், மற்றவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும். வீட்டுக்கு வெளியே சென்று வந்த பிறகு கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகே வீட்டுக்குள் நுழைய வேண்டும். வைட்டமின் சி, புரத சத்து மிகுந்த உணவு வகைளை உட்கொள்ள வேண்டும். மேற்கண்ட தொடர் செயல்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் வரலாமல் தடுக்கலாம். மேலும் காய்ச்சல் கண்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரை நாடி உரிய அறிவுரைக்கு பின் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மாவட்த்தில் காய்ச்சல் பாதித்து உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் விபரங்களை அரசு, தனியார் மருத்துவனைகளில் பெற்று அவர்கள் வசிக்கும் பகுதியில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காய்ச்சல், உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என கூறப்பட்டுள்ளது.


திருச்சியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு! 18 பேர் மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கொசு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே வேளையில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் நோயால்  பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் முதியவர்கள் என 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


திருச்சியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு! 18 பேர் மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப் படுத்தி உள்ளது. அதேபோல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களை சுற்றி கொசு மருந்து அடிக்கும் நடவடிக்கையை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் குப்பைகள் அல்ல படாமலும், தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
MK Stalin: மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
IND vs ENG 3rd Test: சண்டை செஞ்சு தோக்கனும்.. சிராஜ், பும்ராவுக்கு ராயல் சல்யூட் - பாராட்டும் ரசிகர்கள்
IND vs ENG 3rd Test: சண்டை செஞ்சு தோக்கனும்.. சிராஜ், பும்ராவுக்கு ராயல் சல்யூட் - பாராட்டும் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
MK Stalin: மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
IND vs ENG 3rd Test: சண்டை செஞ்சு தோக்கனும்.. சிராஜ், பும்ராவுக்கு ராயல் சல்யூட் - பாராட்டும் ரசிகர்கள்
IND vs ENG 3rd Test: சண்டை செஞ்சு தோக்கனும்.. சிராஜ், பும்ராவுக்கு ராயல் சல்யூட் - பாராட்டும் ரசிகர்கள்
Kia Carens Clavis EV: இனி பேச்சே இல்லை.. கியாவின் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி அறிமுகம் , 490 கிமீ ரேஞ்ச்- கம்மி விலைக்கே..
Kia Carens Clavis EV: இனி பேச்சே இல்லை.. கியாவின் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி அறிமுகம் , 490 கிமீ ரேஞ்ச்- கம்மி விலைக்கே..
மீனவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்! தமிழகத்தில் 8 இடங்களில் புதிய துறைமுகங்கள்: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!
மீனவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்! தமிழகத்தில் 8 இடங்களில் புதிய துறைமுகங்கள்: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!
திமுக கொடியேற்றத்தில் நெகிழ்ச்சி! ஸ்டாலினுக்கு உதவிய தொண்டர்கள்: மயிலாடுதுறையில் உணர்ச்சிமிகு தருணம்!
திமுக கொடியேற்றத்தில் நெகிழ்ச்சி! ஸ்டாலினுக்கு உதவிய தொண்டர்கள்: மயிலாடுதுறையில் உணர்ச்சிமிகு தருணம்!
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
Embed widget