மேலும் அறிய

திருச்சி பாலக்கரை பகுதியில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா, மது, லட்டரி விற்பனை...!

’’கஞ்சா, மது, லாட்டரி ஆகியவை சட்டவிரோதமாக விற்கப்படும் நிலையில் காவல்துறை இதனை கண்டுகொள்ளாமல் மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு’’

திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியில் 24 மணி நேரமும் கஞ்சா, மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதை அருந்தும் போதை வாலிபர்கள்  அப்பகுதி வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் ரகளையில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி மேலப்புதூர் பகுதியில் பள்ளிகள் அதிகம் உள்ளன. இப்பள்ளிகளுக்கு காலையில் வரும் சிறுமிகளை வழிமறித்து கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நடப்பதாக பகுதி மக்களிடையே புகார் எழுந்துள்ளது. மேலும் பல முறை இது தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மிகவும் அச்சமாக ஒரு சூழ்நிலையில் தான் அனுப்புகிறோம் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


திருச்சி பாலக்கரை பகுதியில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா, மது, லட்டரி விற்பனை...!

மேலும் பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இதன் அருகே ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சிறிய கட்டிடம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் டாஸ்மாக் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதை வாங்கி அங்கேயே அமர்ந்து குடிப்பவர்கள் அதிகம். மேலும் தண்டவாளத்தின் அருகே உள்ள பகுதியில் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதை வாங்கும் சிறுவர்கள் பலர் கஞ்சாவை அங்கேயே சுவைக்கின்றன சிறிது நேரத்தில் போதை ஏறியதும் அந்த வழியாக  செல்லும் பள்ளி மாணவிகளிடம் ரகளையில் ஈடுபடும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இங்கு கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை நடப்பது இப்பகுதியில் காவல்துறையினருக்கும் நன்றாகவே தெரியும் ஆனால் ஒரு சில நேரங்களில் நிர்ணயிக்கப்பட்ட நேரம் கடந்த பிறகு வரும் காவல் துறையினரை சீறுடையில் வந்தே கள்ளசந்தையில் விற்கும் மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் சம்பவங்களும் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


திருச்சி பாலக்கரை பகுதியில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா, மது, லட்டரி விற்பனை...!

இது ஒருபுறமிருக்க இதே பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கேரளா லாட்டரி விற்பனையும் சக்கை போடு போடுகிறது. தடை செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் இங்கு ஒரு காலத்தில் இலைமறை காயாக விற்பனை செய்யப்பட்டு வந்தன ஆனால் கடந்த 1 ஆண்டுகளாக வெளிப்படையாகவே விற்பனை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ரவுடிகள் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் தினமும் தவியாய் தவித்து வருகின்றனர். மேலும் பெண்கள் ,சிறு குழந்தைகளை வீட்டில் இருந்து வெளிய அனுப்புவதற்கு மிகவும் அச்சத்துடன் தான் அனுப்புகிறோம். குறிப்பாக  இரவு நேரங்களில் நிம்மதியாக உறக்கம் என்பதே எங்களுக்கு கிடையாது இதற்கு அரசாங்கமும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கோரிக்கையை நாங்கள் பதிவு செய்கிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Shocking Video : நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Embed widget