மேலும் அறிய

திருச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி மதுபான ஆலை - டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்தது அம்பலம்

திருச்சியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் யாகப்புடையான்பட்டியில் சிலர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு போலி மதுபான ஆலை நடத்தி வருவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு காவல்துறைக்கு  ரகசிய தகவல் கிடைத்து. உடனே காவல்துறை  இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலான காவல்துறையினர்  அங்கு விரைந்தனர். பின்னர் திருச்சி மதுவிலக்கு அமலாக்கப்பரிவு துணை காவல் சூப்பிரண்டு முத்தரசன், இன்ஸ்பெக்டர் மீராபாய் குழுவினருடன் நேற்று இரவு அந்த வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் போலி மதுபானம் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 1,500 மதுபாட்டில்கள், 3 பேரல்களில் 150 லிட்டர் மதுபானம், 20 கேன்களில் எரிசாராயம், 50 ஆயிரம் பாட்டில் மூடிகள், டாஸ்மாக் மது சரக்குகளின் போலி லேபிள்கள், எந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் 5 பேரை காவல்துறையினர்  பிடித்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்டவர்கள் காரைக்கால் கீழ காசாக்குடி பகுதியை சேர்ந்த கார்த்தி என்கிற காரைக்கால் கார்த்தி (33), திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த வெற்றி செல்வன் (24), விஜயகுமார் (23), சூரியா (24), பாலமுருகன் (33) என்பது தெரியவந்தது.


திருச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி மதுபான ஆலை - டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்தது அம்பலம்

மேலும் இதில் கார்த்தி மேற்கண்ட போலி மதுபான ஆலையை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இங்கு ஆரம்பித்துள்ளார். மற்ற 4 பேரும் ஆலையில் வேலை செய்துள்ளனர். வெற்றிச்செல்வனும், விஜயகுமாரும் அண்ணன், தம்பிகள் ஆவார்கள். போலி மதுபான ஆலை நடத்திய பலே ஆசாமி கார்த்தி மீது ஏற்கனவே நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் போலி மதுபான ஆலை நடத்தியதாக வழக்குகள் உள்ளன. ஜாமீனில் இருக்கும் அவர் இடத்தை திருச்சிக்கு மாற்றி ஆலையை நடத்தியுள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இந்த போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட எரிசாராயம், லேபிள்கள் போன்ற மூலப்பொருட்கள் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வந்துள்ளனர். இந்த போலி மதுபான பாட்டில்கள் திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டதா? என்பதற்கான உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் அந்த கோணத்தில் விசாரணை நடப்பதாக இன்ஸ்பெக்டர் மீராபாய் தெரிவித்தார்.


திருச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி மதுபான ஆலை - டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்தது அம்பலம்

இதனை தொடர்ந்து  திருச்சி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, டாஸ்மாக் மதுபான கடைகளில் இதுவரை போலி மதுபானம் விற்கப்படவில்லை. புகாரும் வரவில்லை. இதுவரை கடைகளில் போலி மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்படவும் இல்லை. திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை சீராக உள்ளது. விடுமுறை நாட்களில் ரூ.6 கோடி அளவிலும், மற்ற நாட்களில் 4 முதல் 4 அரை கோடிக்கும் விற்பனை நடக்கிறது. கடைகளின் சராசரி விற்பனையை கண்காணித்து வருகிறோம். அதில் இதுவரை தவறு ஏதும் நடக்கவில்லை என்றனர். இருந்தபோதிலும் கைதான இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ரகசியமாக வேறு எங்காவது இதேபோல் வாடகைக்கு வீட்டை பிடித்து போலியான மது வகைகளை தயாரித்து வருகிறார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சந்தையில் மதுபானம் வாங்கி குடிக்கும் குடிமகன்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
Israel Atrocity: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
Embed widget