மேலும் அறிய

திருச்சி : பேருந்து சேவைகள் முடக்கம்.. 1500 மேற்பட்ட காவலர்கள் பணியில் தீவிரம்..

நாடு தழுவிய போராட்டத்தால் திருச்சி மாவட்டத்தில் 30 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கபடுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று  தொடங்கியது. பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய தொழிற்சங்கங்கள் மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் வாலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் திருச்சியில் இன்று  காலை முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதியில் உள்ளனர். மேலும் தனியார் பேருந்து மட்டும் இயங்கி வருவதால், பேருந்தில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனைக்காரணம் காட்டி  வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய தனியார் பேருந்துகள் அதிக அளவு கட்டணம் வசூலிப்பதாக பேருந்து பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் மக்கள், ஆட்டோ மற்றும் வாடகை கார் மூலம் செல்லக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள நான்கு அரசு போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


திருச்சி : பேருந்து சேவைகள் முடக்கம்.. 1500 மேற்பட்ட காவலர்கள் பணியில் தீவிரம்..

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் புறநகரில் 18 இடங்களிலும், மாநகரில் ஒரு இடங்களும் என மொத்தம் 19 இடங்களில் இன்று  மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தற்போது நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருவதால், முக்கியமான இடங்களில், அதிக அளவில் காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் ஆங்காங்கே தீயணைப்பு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் பல வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.  திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இருந்து, இன்று காலை இயக்கப்படும் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. மணப்பாறை, துறையூர், லால்குடி,மண்ணச்சநல்லூர், சமயபுரம் போன்றபுறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறைவாக உள்ளதால், தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.


திருச்சி : பேருந்து சேவைகள் முடக்கம்.. 1500 மேற்பட்ட காவலர்கள் பணியில் தீவிரம்..

 

இதே போல் மத்திய பேருந்து நிலையத்திலும் 30% அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இன்று அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட, மலை தொழிற்சங்கத்தினர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக ரயில்வே நிலையத்தை, முற்றுகையிட செல்ல உள்ளதால், 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளையும் போராட்டம் தொடரும் என்பதால் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமான சூழ்நிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க திருச்சி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Embed widget