மேலும் அறிய

வக்பு வாரியத்திற்கு உரிமையான அனைத்து கிராமங்களின் சொத்துகளும் பத்திரப்பதிவு - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் மக்கள், தாங்கள் குடியிருக்கும் வீடுளுக்கு பட்டா வழங்குவது குறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு, உரிய தீர்வு காணப்படும் என்றார். 

திருச்சி மாவட்டத்தில் வக்பு வாரியத்திற்கு உரிமையான சொத்துக்கள் என்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து கிராமங்களின் சொத்துகளும் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி மாநகரம் தென்னூர் ஆட்டுமந்தை தெருவில், மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, உட்கார்ந்த நிலையில் எழுதிக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு சிலையை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு  திறந்து வைத்தார். மேலும் அதைத் தொடர்ந்து, சவேரியார் கோயில் தெரு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி, புதிதாக நிறுவப்பட்டிருந்த குடிநீர் தொட்டியையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மேயர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்வின் முடிவில், அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியபோது, "தென்னூர் ஆட்டுமந்தை தெருவில் திமுக வட்டச் செயலாளர் காளை என்கிற ஜோசப், தனது சொந்த செலவில் தனியார் இடத்தில் கருணாநிதி சிலையை அமைத்துள்ளார். அந்த சிலையை தற்போது திறந்து வைத்திருக்கிறேன்.

 

 

மேலும் கருணாநிதி எங்களை எல்லாம் உருவாக்கியவர். அவருக்கு இதுபோன்று யார் தங்களது சொந்த செலவில், தனியார் இடத்தில் சிலை வைத்தாலும், அதை திறந்து வைக்க தயாராக இருக்கிறேன். திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் உள்ள சிவாஜி சிலையை நாங்கள்தான் அமைத்தோம். மாநகராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், நீதிமன்ற உத்தரவினால் அந்த சிலையை எங்களால் திறக்க முடியவில்லை. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்றம் தான் முடிவு சொல்ல வேண்டும். திருச்சி மாவட்டத்தில் வக்பு வாரியத்திற்கு உரிமையான சொத்துக்கள் என்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து கிராமங்களின் சொத்துகளும் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பத்திரப் பதிவு பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.  நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் மக்கள், தாங்கள் குடியிருக்கும் வீடுளுக்கு பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பட்டா வழங்குவது குறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு, உரிய தீர்வு காணப்படும் என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget