மேலும் அறிய

பெரம்பலூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து - 2 பேர் உயிரிழப்பு, 37 பேர் காயம்

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள், கார்கள், வேன் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 37 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, நடு இருங்களூர் கலிங்கப்பட்டியான் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் டைட்டஸ் (வயது 20). இவர் தனது நண்பர்களான பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ராபின் (22), 17 வயதுடைய சிறுவன் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரில் இருந்து இருங்களூருக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் இரவு 10.45 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தை தாண்டி சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் பின்னால் சென்னையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்கு செல்ல வேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் நிற்காமல் தடுப்புச்சுவரை தாண்டி எதிரே உள்ள சாலைக்கு சென்றது. அந்த கார் மேலும் அந்த வழியாக மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீதும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீதும் அடுத்தடுத்து மோதியது. மேலும் நிற்காமல் அந்த கார் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள் வேனின் முன்பக்கம் மீதும் மோதி நின்றது. இந்த விபத்தில் அந்த காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


பெரம்பலூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து - 2 பேர் உயிரிழப்பு, 37 பேர் காயம்

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த டைட்டசும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சென்னை கொரட்டூர் சீனிவாசன் நகரை சேர்ந்த கோபிநாத்தின் இரட்டை மகன்களில் மூத்த மகன் பிரவீனும் (30) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன், ராபின், விபத்தை ஏற்படுத்திய காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பிரவீனின் தம்பி பிரகாஷ் (30), சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கெவின் (28), வெங்கடேஷ் (30) ஆகிய 5 போ் படுகாயமடைந்தனர். சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காரில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்களான ராஜீ மனைவி செல்வராணி (68), அவரது மகன் அருள்ராஜ் (50), அதன் டிரைவர் சென்னை ஈக்காட்டு தாங்கலை சேர்ந்த மனோகர் (43) மற்றும் மதுரையில் இருந்து வந்த காரை ஓட்டி வந்த டிரைவர் உசிலம்பட்டியை சேர்ந்த இனியசெல்வன் (33), மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்ற பக்தர்களான 23 பெண்கள், 2 சிறுவர்கள், ஒரு சிறுமி, ஆண் ஒருவர், அதன் டிரைவர் என மொத்தம் 32 பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.


பெரம்பலூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து - 2 பேர் உயிரிழப்பு, 37 பேர் காயம்

இந்த விபத்து குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், பெரம்பலூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 5 பேரையும், காயமடைந்த 32 பேர் என மொத்தம் 37 பேரையும் மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை போக செய்து, விபத்துக்குள்ளான 3 கார்கள், வேன், மோட்டார் சைக்கிளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டது. விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயமடைந்தவர்கள் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூரில் நடந்த இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget