மேலும் அறிய

பெரம்பலூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து - 2 பேர் உயிரிழப்பு, 37 பேர் காயம்

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள், கார்கள், வேன் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 37 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, நடு இருங்களூர் கலிங்கப்பட்டியான் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் டைட்டஸ் (வயது 20). இவர் தனது நண்பர்களான பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ராபின் (22), 17 வயதுடைய சிறுவன் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரில் இருந்து இருங்களூருக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் இரவு 10.45 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தை தாண்டி சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் பின்னால் சென்னையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்கு செல்ல வேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் நிற்காமல் தடுப்புச்சுவரை தாண்டி எதிரே உள்ள சாலைக்கு சென்றது. அந்த கார் மேலும் அந்த வழியாக மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீதும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீதும் அடுத்தடுத்து மோதியது. மேலும் நிற்காமல் அந்த கார் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள் வேனின் முன்பக்கம் மீதும் மோதி நின்றது. இந்த விபத்தில் அந்த காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


பெரம்பலூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து -  2 பேர் உயிரிழப்பு, 37 பேர் காயம்

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த டைட்டசும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சென்னை கொரட்டூர் சீனிவாசன் நகரை சேர்ந்த கோபிநாத்தின் இரட்டை மகன்களில் மூத்த மகன் பிரவீனும் (30) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன், ராபின், விபத்தை ஏற்படுத்திய காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பிரவீனின் தம்பி பிரகாஷ் (30), சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கெவின் (28), வெங்கடேஷ் (30) ஆகிய 5 போ் படுகாயமடைந்தனர். சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காரில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்களான ராஜீ மனைவி செல்வராணி (68), அவரது மகன் அருள்ராஜ் (50), அதன் டிரைவர் சென்னை ஈக்காட்டு தாங்கலை சேர்ந்த மனோகர் (43) மற்றும் மதுரையில் இருந்து வந்த காரை ஓட்டி வந்த டிரைவர் உசிலம்பட்டியை சேர்ந்த இனியசெல்வன் (33), மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்ற பக்தர்களான 23 பெண்கள், 2 சிறுவர்கள், ஒரு சிறுமி, ஆண் ஒருவர், அதன் டிரைவர் என மொத்தம் 32 பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.


பெரம்பலூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து -  2 பேர் உயிரிழப்பு, 37 பேர் காயம்

இந்த விபத்து குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், பெரம்பலூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 5 பேரையும், காயமடைந்த 32 பேர் என மொத்தம் 37 பேரையும் மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை போக செய்து, விபத்துக்குள்ளான 3 கார்கள், வேன், மோட்டார் சைக்கிளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டது. விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயமடைந்தவர்கள் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூரில் நடந்த இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget