மேலும் அறிய

வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

வல்லநாடு பாலத்தில் தற்போது வரை ஒரு பகுதியில் கூட பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெறும் என தெரியவில்லை.

வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை நான்கு வழிச்சாலை திட்டம் கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த 4 வழிச்சாலையில் முறப்பநாடு அருகே வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் குறுக்கே மிக பிரம்மாண்டமான பாலம் ஒன்று 2012 ல் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்ட ஆரம்பம் முதலே பாலம் முறையான கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையில் பாலம் கட்டப்பட்டது முதல் தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட முறை விரிசல் ஏற்பட்டு சேதம் அடைத்துள்ளது. இதனால் போக்குவரத்து பாலத்தின் ஒரு வழியாக மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

இதற்கிடையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரூபாய் 13 கோடி மதிப்பில் பாலம் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. கடந்த 2017 முதல் இந்த பாலத்தில் சீரமைப்பு பணிகள் அவ்வப்போது நடந்து வருகிறது. பணிகள் தொடங்கிய நாட்களில் இருந்தே பாலத்தின் பணிகளால் ஆங்காங்கே விபத்துக்களும் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் சமூக ஆர்வலர் சுகன் கிறிஸ்டோபர் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.


வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

 

கடந்த 2017 முதல் கடந்த மாதம் வரை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் முறப்பாட்டில் இருந்து நாணல்காடு வரையில் மொத்தமாக 28 விபத்துக்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்துக்களில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேர் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் இரவு நேரம் மட்டும் 9 விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகள்; ஒரு வழிப்பாதையால் 6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி & திருநெல்வேலி நான்குவழிச்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை வாகைக்குளம் டோல்கேட்டில் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில இந்த அறிக்கை தற்போது வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இந்த ஒரு வழிப்பாதை போக்குவரத்து நடைபெறும் சாலையில் விபத்துக்களை குறைத்து உயிரிழப்புகளை தடுக்க சாலை நடுவே தண்ணீர் தடுப்பு அரண்(water Barry guard) அமைக்க வேண்டும். ஒரு வழிப்பாதை தொடங்கும் இரு புறங்களிலும் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த வேண்டும். இந்த ஒரு வழிப்பாதை தொடங்கும் சாலையின் 1 கிலோ மீட்டர் முன்பே எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் விபத்து நடைபெறுவதால் போக்குவரத்து மாற்ற மின்னணு எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். ஒரு வழிப்பாதை தொடங்கும் இரு புறங்களிலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். வல்லநாடு பாலத்தில் தற்போது வரை ஒரு பகுதியில் கூட பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெறும் என தெரியவில்லை. வல்லநாடு பாலத்தின் சீரமைப்பு பணியால் 11 உயிரிழப்புகள் நடந்துள்ளதால் மீண்டும் விபத்துக்கள் நடந்து ஒரு உயிர்சேதம் ஏற்படும் முன்பே எந்த விபத்துக்களும் நடக்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை வைக்கிறேன் என்கிறார் சுகன் கிறிஸ்டோபர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget