மேலும் அறிய

பனை ஓலைப்பெட்டிகள் தயாரிப்பு; தொழிலாளர்கள் வாழ்வில் ஏற்றம் வருமா..? - காத்திருக்கும் தொழிலாளர்கள்

பிளாஸ்டிக் ஒழிப்பினை முன்னிறுத்தும் தமிழக அரசு பனைஓலைக்கொட்டான் தொழில் மீண்டும் புத்துணர்ச்சி பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகேயுள்ள நாகலாபுரத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனை ஓலைக்கொட்டன்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் 4 வகையான பனை ஓலைக்கொட்டன்கள் ஸ்வீட்ஸ் கடைகள், காரம், இனிப்பு கடைகள், இறைச்சி கடைகளுக்கும், வெல்லம் விற்பனை செய்வதற்கும் அதிகளவில் விற்பனை செய்யபட்டு வந்தது. ஸ்வீட்ஸ், காரம், இனிப்பு வகைகளை பனை ஓலைக்கொட்டன்களில் வைப்பத்தினால் அவை எளிதில் கெட்டுப்போகாது என்பதால் கடை உரிமையாளர்கள் அதிகளவில் வாங்கி வந்தனர்.


பனை ஓலைப்பெட்டிகள்  தயாரிப்பு; தொழிலாளர்கள் வாழ்வில் ஏற்றம் வருமா..? - காத்திருக்கும் தொழிலாளர்கள்

நாகலாபுரத்தில் தயாரிக்கப்படும் பனை ஓலைக்கொட்டன்கள்  தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பபட்டு வந்த நிலையில் பிளாஸ்டிக் ஆதிக்கம் பனை ஓலைக்கொட்டன் தொழிலை முற்றிலுமாக பாதித்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பினை முன்னெடுத்த காரணத்தினால் ஓலைக்கொட்டன்களுக்கு மவுசு கூடியது மட்டுமின்றி இதனை நம்பி இருந்த தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியாக வேலையும் கிடைத்தது.


பனை ஓலைப்பெட்டிகள்  தயாரிப்பு; தொழிலாளர்கள் வாழ்வில் ஏற்றம் வருமா..? - காத்திருக்கும் தொழிலாளர்கள்

ஸ்வீட்ஸ், காரம், இனிப்பு கடைகள் மட்டுமின்றி இறைச்சிகடைகளிலும் பனை ஓலைக்கொட்டன்கள் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பனை ஓலைக்கொட்டன்கள் தேவைகள் அதிகரித்த காரணத்தினால் நாகலாபுரம் பகுதியில் இரவு பகலாக பனை ஓலைப்பெட்டிகள் தயாரிப்பு நடைபெற்று வந்தது.


பனை ஓலைப்பெட்டிகள்  தயாரிப்பு; தொழிலாளர்கள் வாழ்வில் ஏற்றம் வருமா..? - காத்திருக்கும் தொழிலாளர்கள்

தமிழக அரசு மீண்டும் பிளாஸ்டிக் ஒழிப்பினை வலியுறுத்தி வருவது மட்டுமின்றி, பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று அரசு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது பனை ஓலை பெட்டிகள் தயாரிப்பு தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் பைகளை பயன்படுத்த வலியுறுத்தும் தமிழக அரசு ஸ்வீட்ஸ், காரம் கடைகள், பேக்கரி மற்றும் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக்கினை தவிர்த்து, ஓலைக்கொட்டான்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்று பனை ஓலைகொட்டான்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் தங்களது தொழில் மீண்டும் வேகம் எடுப்பது மட்டுமின்றி, தங்களது வாழ்வாதரமும் உயரம் என்று தெரிவிக்கின்றனர். 


பனை ஓலைப்பெட்டிகள்  தயாரிப்பு; தொழிலாளர்கள் வாழ்வில் ஏற்றம் வருமா..? - காத்திருக்கும் தொழிலாளர்கள்

ஓலைக்கொட்டான்களில் வைக்கப்படும் இனிப்பு, காரம் உள்ளிட்டவை கொட்டுப்போகமால் இருப்பது மட்டுமின்றி, இயற்கையான சுவையும் உண்டு என்பதால் ஒரு காலத்தில் அனைவராலும் அதிகளவில் விரும்பட்டு வந்தது. மீண்டும் அதற்கு தமிழக அரசு புத்துணர்ச்சி அளிக்க அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கினால் அவர்களுடைய தொழில் வளர்ச்சி அடையும், வாழ்வாதரம் உயரும் என்கின்றனர் இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளோர்.


பனை ஓலைப்பெட்டிகள்  தயாரிப்பு; தொழிலாளர்கள் வாழ்வில் ஏற்றம் வருமா..? - காத்திருக்கும் தொழிலாளர்கள்

பனை ஓலை கொட்டான் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த லட்சுமி என்பவர் கூறுகையில், அதிகாரிகள் எல்லாம் இந்த ரோட்டு வழியாத்தான் போறாக வாராக, எங்களை தான் ஒருத்தரும் கண்டுக்க மாட்டாக, பனை வாரியமாது இத்தொழிலை கண்டு கொள்ளுமான்னா அதுக்கும் விடை தெரியல எனக்கூறும் இவர், எத்தனையோ பேருக்கு உதவி செய்யும் தமிழக முதல்வர், எங்களுக்கு உதவி செய்ய வர மாட்டாரா என கூறிக்கொண்டே, பனை ஓலை பெட்டியை முனைந்து கொண்டு காத்திருக்கின்றார்கள்  நாகலாபுரம் சாலை ஓரமாக.

பிளாஸ்டிக் ஒழிப்பினை முன்னிறுத்தும் தமிழக அரசு பனைஓலைக்கொட்டான் தொழில் மீண்டும் புத்துணர்ச்சி பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Sunil Chhetri Retirement: அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
Mathew Thomas:  விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பம் - ரசிகர்கள் அதிர்ச்சி
விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்!  என்ன நடந்தது?
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்! என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Selvaperunthagai | ”பாஜக 100-ஐ தாண்டாது! மோடி கெஞ்சுகிறார்” விளாசிய செல்வப்பெருந்தகைRashmika about Modi | NTK Vignesh Mother | ”ஒத்த பைசா செலவு பண்ணல..சீமானுடன் விவாதிக்க தயார்”விக்னேஷ் தாயார் சவால்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Sunil Chhetri Retirement: அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
Mathew Thomas:  விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பம் - ரசிகர்கள் அதிர்ச்சி
விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்!  என்ன நடந்தது?
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்! என்ன நடந்தது?
Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Veerapandiya Kattabomman: கட்டபொம்மனாக ஒளிர்ந்த சிவாஜிகணேசன்... ”வீரபாண்டிய கட்டபொம்மன்” வெளியாகி 65 ஆண்டுகள் நிறைவு!
கட்டபொம்மனாக ஒளிர்ந்த சிவாஜிகணேசன்... ”வீரபாண்டிய கட்டபொம்மன்” வெளியாகி 65 ஆண்டுகள் நிறைவு!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Embed widget