மேலும் அறிய

இரவு உணவு வழங்குவதில் அலட்சியம்! தனியார் உணவகத்திற்கு அபராதம் விதிப்பு - நுகர்வோர் நீதிமன்றம்

இரவு உணவு வழங்குவதில் அஜாக்கரதையாக செயல்பட்ட தனியார் உணவகத்திற்கு நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை சிந்துபூந்துறை வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் 27.02.2022 அன்று இரவு பார்சல் புரோட்டா, நெய்ரோஸ்ட் மற்றும் மஸ்ரூம் தோசை ஆகிய உணவு கேட்டு ரூபாய் 484 செலுத்தியுள்ளார். அதற்குரிய ரசீதும் பெற்றுள்ளார்.

இரவு உணவில் அலட்சியம்:

ஆனால் ஒரு மணி நேரமாக காத்திருந்தும் தனியார் ஹோட்டல் பார்சல் வழங்காமல் இருந்துள்ளது. சிவசுப்பிரமணியன் நாகர்கோவிலில் இருந்து  ராமேஸ்வரம் கோயிலுக்கு தரிசனம் செய்ய பேருந்தில் பயணம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.  மேலும் இரவு உணவுக்காக தனியார் ஹோட்டல் ஆர்டர் செய்த உணவை வழங்காமல் ஆர்டர் செய்த உணவானது வேறு நபருக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் இட்லி மற்றும் தோசை மட்டுமே உள்ளது. அதனால் உடனே மனுதாரருக்கு பார்சல் தர இயலாது என்று தெரிவித்துள்ளனர்.

இரவு முழுவதும் பட்டினி:

சிவசுப்பிரமணியன் பேருந்துக்கு நேரமாகிவிட்டதால் தான் செலுத்திய பணத்தினை திரும்ப கேட்டுள்ளார். அப்போது பணத்தை கொடுப்பதற்கு தனியார் ஹோட்டல் மறுத்து விட்டது. மேலும் சிவசுப்பிரமணியிடம் கொடுக்கப்பட்ட ரசீதில் உணவு டெலிவரி செய்தற்குரிய முத்திரையிடப்படவில்லை என்பதால் வேறு ஒரு நாளில் வந்து பார்சல் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்ட சிவசுப்பிரமணியம்  இரவு முழுவதும் சாப்பிட முடியாமல் பட்டினியாக ராமேஸ்வரம் சென்றுள்ளார்.

மன உளைச்சல் ஏற்பட்ட சிவ சுப்பிரமணியம் வழக்கறிஞர் பிரம்மா மூலம்  நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில்  வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கினை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர்  மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ₹5000 /- வழக்குச் செலவு ₹2000/-சேர்த்து மொத்தம்  ரூபாய் 7000த்தை தனியார் ஹோட்டல்  சிவ சுப்பிரமணியத்திற்கு வழங்க வேண்டும் எனவும், இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்க தவறினால் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இரவு உணவு வழங்குவதில் அலட்சியமாக செயல்பட்ட தனியார் உணவகத்திற்கு  நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget