மேலும் அறிய

திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் வந்ததால், அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது பக்கமாக திருப்பி உள்ளார். அப்போது பேருந்து விபத்துக்குள்ளானது.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி இன்று காலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது திருவாரூர் அருகே காக்காகோட்டு என்ற இடத்தில் திருவாரூரில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் வந்ததால் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது பக்கமாக திருப்பி உள்ளார். அப்பொழுது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் பேருந்தில் முன் பக்கம் முழுவதுமாக சிதலம் அடைந்து பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதில் குவளைக்கால் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுமதி, கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெசிமா பர்வீன், கூத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி, மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விமலா ராணி, கீழ மாங்குடியைச் சேர்ந்த ரேவதி, சீர்காழி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர்.


திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

மேலும், அரசு பேருந்து ஓட்டுநர் நெல்லிவளவநாதனுக்கு முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் காவல்துறையினர் காயம்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் நேரில் பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக நன்னிலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மற்றும் மன்னார்குடி ஆகிய இரண்டு அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இந்த போக்குவரத்து பணிமனைகளில் இருந்து நாள்தோறும் அருகில் உள்ள வேளாங்கண்ணி திருச்சி தஞ்சை கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்று வருகின்றன. சமீப காலமாக அரசு பேருந்துகள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தினால் அதிக அளவில் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி என்ற இடத்தில் அரசு பேருந்தில் படிக்கட்டு உடைந்து மாணவர்கள் காயம் அடைந்தனர். அதேபோன்று எண்கன் என்ற இடத்தில் அரசு பேருந்து டயர் கழன்று சென்று விபத்துக்குள்ளானது. இதேபோன்று தொடர்ந்து அரசு பேருந்துகள் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. ஆகவே அரசு பேருந்தை இயக்குவதற்கு முன்பாக பேருந்தை முழுமையாக பராமரித்து இயக்கினால் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வசதியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget