மேலும் அறிய

திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் வந்ததால், அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது பக்கமாக திருப்பி உள்ளார். அப்போது பேருந்து விபத்துக்குள்ளானது.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி இன்று காலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது திருவாரூர் அருகே காக்காகோட்டு என்ற இடத்தில் திருவாரூரில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் வந்ததால் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது பக்கமாக திருப்பி உள்ளார். அப்பொழுது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் பேருந்தில் முன் பக்கம் முழுவதுமாக சிதலம் அடைந்து பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதில் குவளைக்கால் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுமதி, கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெசிமா பர்வீன், கூத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி, மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விமலா ராணி, கீழ மாங்குடியைச் சேர்ந்த ரேவதி, சீர்காழி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர்.


திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

மேலும், அரசு பேருந்து ஓட்டுநர் நெல்லிவளவநாதனுக்கு முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் காவல்துறையினர் காயம்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் நேரில் பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக நன்னிலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மற்றும் மன்னார்குடி ஆகிய இரண்டு அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இந்த போக்குவரத்து பணிமனைகளில் இருந்து நாள்தோறும் அருகில் உள்ள வேளாங்கண்ணி திருச்சி தஞ்சை கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்று வருகின்றன. சமீப காலமாக அரசு பேருந்துகள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தினால் அதிக அளவில் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி என்ற இடத்தில் அரசு பேருந்தில் படிக்கட்டு உடைந்து மாணவர்கள் காயம் அடைந்தனர். அதேபோன்று எண்கன் என்ற இடத்தில் அரசு பேருந்து டயர் கழன்று சென்று விபத்துக்குள்ளானது. இதேபோன்று தொடர்ந்து அரசு பேருந்துகள் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. ஆகவே அரசு பேருந்தை இயக்குவதற்கு முன்பாக பேருந்தை முழுமையாக பராமரித்து இயக்கினால் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வசதியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
" மரமண்டையா இருக்கியேனு திட்டுவது எவ்ளோ பெரிய தப்பு " விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர் உருக்கம்
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget