மேலும் அறிய

திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் வந்ததால், அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது பக்கமாக திருப்பி உள்ளார். அப்போது பேருந்து விபத்துக்குள்ளானது.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி இன்று காலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது திருவாரூர் அருகே காக்காகோட்டு என்ற இடத்தில் திருவாரூரில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் வந்ததால் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது பக்கமாக திருப்பி உள்ளார். அப்பொழுது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் பேருந்தில் முன் பக்கம் முழுவதுமாக சிதலம் அடைந்து பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதில் குவளைக்கால் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுமதி, கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெசிமா பர்வீன், கூத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி, மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விமலா ராணி, கீழ மாங்குடியைச் சேர்ந்த ரேவதி, சீர்காழி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர்.


திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

மேலும், அரசு பேருந்து ஓட்டுநர் நெல்லிவளவநாதனுக்கு முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் காவல்துறையினர் காயம்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் நேரில் பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக நன்னிலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மற்றும் மன்னார்குடி ஆகிய இரண்டு அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இந்த போக்குவரத்து பணிமனைகளில் இருந்து நாள்தோறும் அருகில் உள்ள வேளாங்கண்ணி திருச்சி தஞ்சை கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்று வருகின்றன. சமீப காலமாக அரசு பேருந்துகள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தினால் அதிக அளவில் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி என்ற இடத்தில் அரசு பேருந்தில் படிக்கட்டு உடைந்து மாணவர்கள் காயம் அடைந்தனர். அதேபோன்று எண்கன் என்ற இடத்தில் அரசு பேருந்து டயர் கழன்று சென்று விபத்துக்குள்ளானது. இதேபோன்று தொடர்ந்து அரசு பேருந்துகள் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. ஆகவே அரசு பேருந்தை இயக்குவதற்கு முன்பாக பேருந்தை முழுமையாக பராமரித்து இயக்கினால் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வசதியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: 10 பேர் முன் ஜாமீன் மனு; நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: 10 பேர் முன் ஜாமீன் மனு; நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget