மேலும் அறிய

திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் வந்ததால், அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது பக்கமாக திருப்பி உள்ளார். அப்போது பேருந்து விபத்துக்குள்ளானது.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி இன்று காலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது திருவாரூர் அருகே காக்காகோட்டு என்ற இடத்தில் திருவாரூரில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் வந்ததால் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது பக்கமாக திருப்பி உள்ளார். அப்பொழுது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் பேருந்தில் முன் பக்கம் முழுவதுமாக சிதலம் அடைந்து பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதில் குவளைக்கால் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுமதி, கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெசிமா பர்வீன், கூத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி, மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விமலா ராணி, கீழ மாங்குடியைச் சேர்ந்த ரேவதி, சீர்காழி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர்.


திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

மேலும், அரசு பேருந்து ஓட்டுநர் நெல்லிவளவநாதனுக்கு முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் காவல்துறையினர் காயம்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் நேரில் பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக நன்னிலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மற்றும் மன்னார்குடி ஆகிய இரண்டு அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இந்த போக்குவரத்து பணிமனைகளில் இருந்து நாள்தோறும் அருகில் உள்ள வேளாங்கண்ணி திருச்சி தஞ்சை கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்று வருகின்றன. சமீப காலமாக அரசு பேருந்துகள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தினால் அதிக அளவில் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி என்ற இடத்தில் அரசு பேருந்தில் படிக்கட்டு உடைந்து மாணவர்கள் காயம் அடைந்தனர். அதேபோன்று எண்கன் என்ற இடத்தில் அரசு பேருந்து டயர் கழன்று சென்று விபத்துக்குள்ளானது. இதேபோன்று தொடர்ந்து அரசு பேருந்துகள் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. ஆகவே அரசு பேருந்தை இயக்குவதற்கு முன்பாக பேருந்தை முழுமையாக பராமரித்து இயக்கினால் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வசதியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
விருதுநகர் குழந்தைகளின் நலனுக்கு ரூ.1.13 கோடியில் 6 அங்கன்வாடி மையங்கள் திறப்பு !
விருதுநகர் குழந்தைகளின் நலனுக்கு ரூ.1.13 கோடியில் 6 அங்கன்வாடி மையங்கள் திறப்பு !
மதுரை விதிமீறல் கட்டடங்கள்: 94 அதிகாரிகள் மீது நடவடிக்கை, உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரை விதிமீறல் கட்டடங்கள்: 94 அதிகாரிகள் மீது நடவடிக்கை, உயர் நீதிமன்றம் அதிரடி!
இரும்பு தாது செம்மண் கடத்தல்: உயர் நீதிமன்றம் கடும் கேள்வி.. மாவட்ட ஆட்சியருக்கு ஆகஸ்ட் 12 கெடு !
இரும்பு தாது செம்மண் கடத்தல்: உயர் நீதிமன்றம் கடும் கேள்வி.. மாவட்ட ஆட்சியருக்கு ஆகஸ்ட் 12 கெடு !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget