மேலும் அறிய

குளம் போல் காட்சியளிக்கும் வயல்.! தண்ணீரில் மூழ்கிய 30 ஆயிரம் ஏக்கர் பயிர் - திருவாரூர் சோகம்!

பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக வேளாண் துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முழுமையாக கணக்கெடுத்து எங்களுக்கு உரிய நிவாரணத்தை வங்கி கணக்கு மூலமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவாரூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு.
 
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 60 சதவீதம் நேரடி விதைப்பில்,  40 சதவிகிதம் நடவு பணியிலும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கடந்த நான்கு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் மழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முழுமையாக மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு மட்டும் திருவாரூர் - 2.2 சென்டிமீட்டர்.
நன்னிலம் - 9.7 சென்டிமீட்டர் குடவாசல் - 6.4 சென்டிமீட்டர் நீடாமங்கலம் - 4.6 சென்டிமீட்டர் வலங்கைமான், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

குளம் போல் காட்சியளிக்கும் வயல்.! தண்ணீரில் மூழ்கிய 30 ஆயிரம் ஏக்கர் பயிர் - திருவாரூர் சோகம்!
இந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மீண்டும் 30,000 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் முழு கொள்ளளவில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்பொழுது ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளோம். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் எங்கள் மாவட்டங்களை ஆய்வு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டால் 6 ஆயிரம் மதிப்பில் இடு பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் எங்களுக்கு இனி இடுபொருள்கள் கொடுத்து எந்தப் பயனும் இல்லை. காரணம் இன்னும் 60 நாட்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில் இனி புதிதாக விதை விதைக்கவும் தெளிக்கவும் முடியாது. ஆகையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக வேளாண் துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முழுமையாக கணக்கெடுத்து எங்களுக்கு உரிய நிவாரணத்தை வங்கி கணக்கு மூலமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளம் போல் காட்சியளிக்கும் வயல்.! தண்ணீரில் மூழ்கிய 30 ஆயிரம் ஏக்கர் பயிர் - திருவாரூர் சோகம்!
அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக வேளாண்துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் அனைத்து அதிகாரிகளும் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தரவேண்டும் மேலும் மழை பாதிப்பு சம்பந்தமாக பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. அதில் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
திருமண நாளில் நிகழ்ந்த துயரம் ; கணவன் புறக்கணித்ததால் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்
திருமண நாளில் நிகழ்ந்த துயரம் ; கணவன் புறக்கணித்ததால் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்
புனித இரவில் விடிய விடிய தொழுகை.. மதுரையில் குவிந்த இஸ்லாமியர்கள் - காரணம் என்ன?
புனித இரவில் விடிய விடிய தொழுகை.. மதுரையில் குவிந்த இஸ்லாமியர்கள் - காரணம் என்ன?
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget