மேலும் அறிய

திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடக்கம்

தினசரி காய்கறி அங்காடி கட்டிடம் சிறு உணவகம், கழிவறை, தானியங்கி வங்கி இயந்திரம் உள்ளிட்ட வசதிகளுடன் 44 கடைகள் கட்டும் பணி நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடங்கியது.

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி சார்பில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தற்போதைய தீவிர நடவடிக்கையால் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட பிறகு பழைய பேருந்து நிலையம் காலியாக கிடந்தது. அதன் பிறகு பெரிய கோயில் வடக்கு வீதியில் கோயில் சுற்றுச்சுவர் ஓரமாக காய்கறி மார்க்கெட் 100 ஆண்டுகளாக இயங்கி வந்தது. அதன்பிறகு சுமார் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் 22 ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் கடந்த 2000 ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைத்து காய்கறி மார்க்கெட் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை அதன் காரணமாக கட்டிடம் பழுதடைந்துள்ளது. கட்டிடத்தில் மரம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.


திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடக்கம்

இந்த காய்கறி மார்க்கெட்டிற்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இங்கே 38 கடைகளுக்கு மேல் இயங்கி வருகிறது. மேலும் கூடுதல் கடைகள் கட்டும் அளவுக்கு பின்புறம் போதிய இடமும் உள்ளது. ஆனால் சீரமைக்கப்படாததால் வளாகம் முழுவதும் புதர் மண்டி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் அடிக்கடி கட்டிடத்தின் மேற்குறை இடிந்து விழுந்து வருகிறது. ஆனால் சேதம் அடைந்த கட்டிடத்தில் காய்கறி கடை இயங்கி வருகிறது எனவே புதிதாக காய்கறி மார்க்கெட் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.


திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடக்கம்

இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி வந்து திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பதவி ஏற்றவுடன் புதிய காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் அரசு திட்டம் மதிப்பீடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அதன்படி திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசும் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை அடுத்து திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் இரண்டு கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் தினசரி காய்கறி அங்காடி கட்டிடம் சிறு உணவகம் கழிவறை தானியங்கி வங்கி இயந்திரம் உள்ளிட்ட வசதிகளுடன் 44 கடைகள் கட்டும் பணி நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.  தீவிர நடவடிக்கையால் காய்கறி அங்காடி கட்டிடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மீண்டும் கடந்த 10 ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் காய்கறி மார்க்கெட் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதற்கு திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget