மேலும் அறிய

பஞ்சப்பூர் இணைப்பு சாலை 3ம் கட்ட பணிகள் எப்போது தொடங்கும்: வெளியான அசத்தல் தகவல்

திருச்சி மாநகராட்சி, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய (IBT) இணைப்பு சாலை திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

தஞ்சாவூர்: திருச்சியில் பஞ்சப்பூர் இணைப்பு சாலையின் மூன்றாம் கட்ட பணிகள் தொடங்க இருக்கிறது. இதற்காக விரைவில் டெண்டர் வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இந்த பணிகள் நிறைவடைந்தால் போக்குவரத்து இடையூறுகள் குறையும். இது பயணிகளுக்கு நேரத்தையும், வாகன ஓட்டுனர்களுக்கு எரிபொருளையும் மிச்சப்படுத்தும். இந்தத் திட்டத்தின் வெற்றி, திருச்சி மாநகரத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். 

திருச்சி மாநகராட்சி, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய (IBT) இணைப்பு சாலை திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறது. இதற்கான டெண்டர் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால் திருச்சி மாநகர வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

பஞ்சப்பூரில் உள்ள கொரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றின் வலது கரையில் இருந்து இந்த IBT இணைப்பு சாலை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம், பஞ்சப்பூரை கருமண்டபத்துடன் (2 கி.மீ) இணைக்கிறது. இரண்டாம் கட்டம், அரியலூர் முதல் குடமுருட்டி சோதனைச் சாவடி வரை (2.1 கி.மீ) செல்கிறது. மூன்றாம் கட்டம், கருமண்டபத்திற்கும் அரியலூருக்கும் இடையே (5.7 கி.மீ) அமைகிறது. முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் மேம்பால சாலைகள் உட்பட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணி தேவைப்பட்ட மூன்றாம் கட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் "ஜனவரி 2026-ல் மூன்றாம் கட்டத்திற்கான டெண்டர் வெளியிடப்படும். 2026-ல் இணைப்பு சாலையின் ஒரு பகுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று திருச்சி மேயர் தெரிவித்துள்ளார். முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பணிகள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் இருவரும் ஒரே வேகத்தில் செயல்பட்டால், அக்டோபர் 2026-க்குள் போக்குவரத்துக்கு திறக்கப்பட வாய்ப்புள்ளது.

நிலம் கையகப்படுத்தும் தேவையை 4 ஏக்கரில் இருந்து 1 ஏக்கராகக் குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இணைப்பு சாலையின் சுமார் 60% பகுதிகள் மேம்பாலங்களாக அமைக்கப்பட உள்ளன. இதனால், நிலத் தேவையும் குறையும், மேலும் இருவழிப் போக்குவரத்தும் சீராக நடைபெறும். இருப்பினும், கனரக வாகனங்களுக்கு இதில் அனுமதி இல்லை. இணைப்பு சாலையின் மொத்த அகலம் 9.5 முதல் 12.5 மீட்டர் வரை இருக்கும். மேம்பாலங்களில் இருந்து சாலைக்கு வருவதற்கு 5-6 மீட்டர் அகலத்திற்கு சேவை சாலைகளும், இரண்டு ரயில்வே மேம்பாலங்களும் (RoBs) அமைக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம், திருச்சி நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பேருந்து முனையத்திற்குச் செல்வது எளிதாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நகரின் மையப் பகுதிகளுக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் இடையே இணைப்பு வலுப்பெறும். மேம்பாலங்கள் அமைப்பதால், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகள் குறையும். திருச்சி மாநகரத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

டிரைவர்கள் கவனமுடன், பாதுகாப்பாக இயக்க வேண்டும்: பள்ளி வாகன ஆய்வில் கலெக்டர் அறிவுறுத்தல்
டிரைவர்கள் கவனமுடன், பாதுகாப்பாக இயக்க வேண்டும்: பள்ளி வாகன ஆய்வில் கலெக்டர் அறிவுறுத்தல்
இந்த மழையைத்தான் எதிர்பார்த்தோம்! தஞ்சை விவசாயிகளின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
இந்த மழையைத்தான் எதிர்பார்த்தோம்! தஞ்சை விவசாயிகளின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
பீன்ஸ்சும், அவரைக்காயும் உச்சத்தில்... இன்றைய காய்கறி நிலவரம் இதுதாங்க
பீன்ஸ்சும், அவரைக்காயும் உச்சத்தில்... இன்றைய காய்கறி நிலவரம் இதுதாங்க
கணிதமேதை ராமானுஜர் வாழ்ந்த இல்லம்! கும்பகோணத்தில் ஒரு பொக்கிஷம்!
கணிதமேதை ராமானுஜர் வாழ்ந்த இல்லம்! கும்பகோணத்தில் ஒரு பொக்கிஷம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!
விஜய் வசம் 16 துறைகள்! யாருக்கு என்னென்ன இலாகா? அதிகாரப்பூர்வ பட்டியல்
EPS-க்கு உதவும் ஸ்டாலின்?CM விஜய்க்கு ஸ்கெட்ச்! SP வேலுமணி அணிக்கு சிக்கல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
Anitha R Radhakrishnan: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என விமர்சித்த முன்னாள் அமைச்சர்!
Anitha R Radhakrishnan: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என விமர்சித்த முன்னாள் அமைச்சர்!
23 வயது கர்ப்பிணி..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
23 வயது, 5வது கரு..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
TN Cabinet: அமைச்சர் இல்லாத இலாகாக்கள்..! அதிமுகவிற்கு நோ, விரிவாக்கம் எப்போது? CM விஜய் அறிவிப்பு?
அமைச்சர் இல்லாத இலாகாக்கள்..! அதிமுகவிற்கு நோ, விரிவாக்கம் எப்போது? CM விஜய் அறிவிப்பு?
Minister Raj Mohan: இயக்குநர் டூ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்... ராஜ்மோகன் கடந்து வந்த பாதை!
Minister Raj Mohan: இயக்குநர் டூ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்... ராஜ்மோகன் கடந்து வந்த பாதை!
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
Ravi Mohan: ஆண் மட்டுமே தவறு செய்பவன் அல்ல.. ரவி மோகனுக்கு பிரபல நடிகை ஆதரவு!
Ravi Mohan: ஆண் மட்டுமே தவறு செய்பவன் அல்ல.. ரவி மோகனுக்கு பிரபல நடிகை ஆதரவு!
திடீரென மாறிய வானிலை.. இன்னும் சில மணி நேரங்களில் இடி மின்னலுடன் தரமான சம்பவம் இருக்கு!
திடீரென மாறிய வானிலை.. இன்னும் சில மணி நேரங்களில் இடி மின்னலுடன் தரமான சம்பவம் இருக்கு!
Embed widget