மேலும் அறிய

ஓய்வூதியத்தில் 35 ஆயிரம் மரக்கன்றுகள்....இயற்கையை நேசிக்கும்  முன்னாள் ராணுவ வீரர்..!

கடந்த 50 ஆண்டுகளில் நாம் பாதுகாக்காமல் மாசு படுத்திய காற்றை சுத்தம் செய்யவும், மரங்களை விரைவாக வளர்க்கவும் குறுங்காடுகள் நமக்கும், பின்வரும் புதிய தலைமுறையினருக்கும் அவசர தேவையாக உள்ளது எனதெரிவித்தார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, மன்னை நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைலாசம். இவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். தனது இரு மகள்களுக்கும் திருமணம் ஆனநிலையில் மனைவியுடன் வசித்துவரும் இவர் ராணுவத்தில் பணியாற்றிய போதே மரங்கள் மீதும் அளவற்ற பற்று கொண்டவராக இருந்துள்ளார். அவர் பணிபுரிந்த பல மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்துள்ளார். தற்போது 60 வயதாகவும் இவர் கடந்த 30 ஆண்டுகளாக மன்னார்குடி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். “பசுமை கரங்கள்” எனும் பெயரில் இயற்கை ஆர்வலர்களை கொண்ட அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கோடை காலங்களிலும், காஜா புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வருகிறார். பள்ளி, கல்லூரிகள், சாலை ஓரங்கள், ஆறு, குளம், ஏரிக்கரை, இயற்கை ஆர்வலர்களின் இல்லங்கள், ஆலயங்கள் என நகரின் பல பகுதிகளிலும் நிழல் தரும் பல வகையான மரக் கன்றுகளை நாள்தோறும் நட்டு வருகிறார் கைலாசம் அவர்கள் மரங்களின் மீது கொண்டுள்ள தீர காதலால் மன்னார்குடி அரசு கலை கல்லூரி, ஆர். பி. சிவம் நகர், மன்னார்குடி மகளிர் காவல் நிலையம், மன்னை நகர் என மன்னார்குடி மட்டுமின்றி அருகில் உள்ள புஷ்ப்பவனம் கிராமத்தில் குறுங்காடுகளை அமைத்து சிறந்த முறையில் பராமரித்து வருகிறார்.


ஓய்வூதியத்தில் 35 ஆயிரம் மரக்கன்றுகள்....இயற்கையை நேசிக்கும்  முன்னாள் ராணுவ வீரர்..!

மரங்களை நடுவதோடு விட்டுவிடாமல் இழுத்து செல்லும் வகையில் சிறிய தண்ணீர் வண்டி ஒன்றை தயார் செய்து அதில் நீர் நிரப்பி நாள் தோறும் குறிப்பாக கோடைகாலங்களில் நீரின்றி வாடும் சாலை ஓரங்களில் உள்ள மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதை தனது தலையாக கடமையாகவும் செய்து வருவாகிறார் கைலாசம் அவர்கள். காஜா புயலுக்கு பல ஆயிரம் மரங்களை பறிகொடுத்து விட்டோமே என்றேண்ணி காடுகளை உருவாக்க வேண்டும் என நினைத்தார். பள்ளி கல்லூரிகள் பலவற்றில் குறுங்காடுகளை அமைக்க தொடங்கினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பம், வாகன பெருக்கம் போன்றவற்றால் பிராண வாயுவின் அளவு குறைந்து வருகிறது. எனவே தூய்மையான காற்றை இயற்கை முறையில் உற்பத்தி செய்வதற்கு மிக சிறந்த வழி மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்குவதே என கூறும் கைலாசம் கடந்த 50 ஆண்டுகளில் நாம் பாதுகாக்காமல் மாசு படுத்திய காற்றை சுத்தம் செய்யவும், மரங்களை விரைவாக வளர்க்கவும் குறுங்காடுகள் நமக்கும், நமக்கு பின்வரும் புதிய தலைமுறையினருக்கும் அவரச தேவையாக உள்ளது என தெரிவித்தார்.


ஓய்வூதியத்தில் 35 ஆயிரம் மரக்கன்றுகள்....இயற்கையை நேசிக்கும்  முன்னாள் ராணுவ வீரர்..!

மரங்களை பாதுகாப்பது குறித்த அக்கறையும் விழிப்புணர்வும் மக்கள் மனதில் வேரூன்ற வேண்டும். எனவே பொதுமக்கள் ஒத்துழைத்தால் நாட்டுக்குள் காட்டை உருவாக்குவது எளிது என கூறிய கைலாசம் மரம் வளர்ப்பது குறித்து மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க ஆசிரியர்கள் அல்லாத தனி குழு ஒன்றை அமைத்து மரம் வளர்பப்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கைலாசம் அவர்கள் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளதாகவும் புதிய வனங்களை உருவாக்க தன்னிடம் மேலும் 30 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மரம் வளர்க்க விரும்புபவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக தருவதாக கூறும் கைலாசம் கன்றுகளை சரியாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  தனது குடும்பத்தை கவனித்தது கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை உருவாக்கியுள்ள கைலாசம் காடுகளை உருவாக்க மேலும் 30 ஆயிரம் மரக்கன்றுகள் இருப்பதாக கூறுகிறார் இடைவிடாது அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து செடிகளை பாராமரித்து பாதுகாக்கும் இவர் தனக்கு கிடைக்கும் ஓய்வூதிய தொகையை கொணடே மரங்களை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

 

தலைப்பு செய்திகள்

தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
வெயில், மழையிலிருந்து பயணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: பூதலூரில் உயர் மட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரம்
வெயில், மழையிலிருந்து பயணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: பூதலூரில் உயர் மட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரம்
மக்களை ஏமாற்றும் செயல்... தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் எதற்காக?
மக்களை ஏமாற்றும் செயல்... தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் எதற்காக?

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
Embed widget