மேலும் அறிய

பூக்கள் புயலானது... கூடுதல் பஸ் இயக்காததால் அரசு பஸ்சை சிறைப்பிடித்த மாணவிகள்

அப்பகுதியில் இருந்து, ஒரத்தநாட்டில் உள்ள அரசு கலை கல்லுாரிக்கு செல்லும் சுமார் 1,500 மாணவிகள் படிக்காட்டில் நின்று பயணம் செய்ய வேண்டும் அல்லது வெட்டிக்காட்டில் இருந்து லிப்ட் கேட்டு செல்ல வேண்டும்.

தஞ்சாவூர்: பொறுத்தது போதும்... பொங்கி எழு என்று பஸ் வசதி இல்லாததால் தாமதமாக கல்லூரிக்கு செல்வதால் தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் நிலை உள்ளது என்று கூறி மாணவிகள் அரசு பஸ்சை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வெட்டிக்காட்டில் இருந்து ஒரத்தநாடு அரசு கலைக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிக்கு பஸ் வசதி இல்லாததால், தாமதமாக கல்லுாரிக்கு சென்றால், ஆப்சென்ட் போடுவதால், கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தி மாணவிகள் அரசு பஸ்சை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இருந்து அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இப்பஸ் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, திருவோணம், ஊரணிபுரம், சில்லத்துார், வெட்டிக்காடு வழியாக செல்கிறது. இதில், காலை 7:30 மற்றும் 8:30 மணிக்கு என இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் இருந்து, ஒரத்தநாட்டில் உள்ள அரசு கலை கல்லுாரிக்கு செல்லும் சுமார் 1,500 மாணவிகள் படிக்காட்டில் நின்று பயணம் செய்ய வேண்டி உள்ளது. மேலும், சில மாணவிகள் வெட்டிக்காட்டில் இருந்து வேன், டூ வீலர்களில் லிப்ட் கேட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், கல்லுாரிக்கு காலதாமதமாக செல்வதால், அடையாள அட்டையை பறிமுதல் செய்வதோடு, வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போட்டு விடுவதாக மாணவிகள் வேதனையடைந்து வந்தனர்.

இதில், பாதிக்கப்படும் மாணவிகள் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் கூடுதலாக பஸ் இயக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மாணவிகள் கறம்பக்குடியில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்த அரசு டவுன் பஸ் எண்– 36 யை, வெட்டிகாட்டில் சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு ஆதரவாக, அப்பஸ்சில் வந்த கல்லுாரி மாணவிகளும் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவோணம் தாசில்தார் சுந்தரமூர்த்தி, ஒரத்தநாடு போக்குவரத்து டெப்போ அலுவலர்கள், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,  காலை  மற்றும் மாலை கூடுதல் பஸ் இயக்கப்படும் என உறுதியளித்தின் பேரில், போராட்டத்தை மாணவிகள் கைவிட்டனர். பிறகு, ஒரத்தநாட்டில் இருந்து ஒரு பஸ் வரவழைக்கப்பட்டு மாணவிகள் அதில் அழைத்து செல்லப்பட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாணவிகள் தரப்பில் கூறுகையில், பலமுறை தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டோம். கூடுதல் பஸ் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடில் மீண்டும் போராட்டம் நடத்த நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். தினமும் தாமதமாக கல்லூரிக்கு செல்வதால் ஆப்சென்ட் போட்டு விடுகின்றனர். மேலும் இதனால் கல்வி கற்கும் நிலையும் பாதிக்கப்படுகிறது. இது தற்காலிக தீர்வாக இருக்கக்கூடாது. நிரந்தரமான தீர்வாக இருக்க வேண்டும். மிகவும் சிரமான நிலையில்தான் எங்களை பெற்றோர்கள் கல்லூரியில் சேர்த்துள்ளனர். ஆனால் கூடுதல் பஸ் இல்லாததால் எங்களின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
Embed widget